Don't Miss!
- News உயிரைக் கொல்லும் ஸ்மோக் பிஸ்கட்! இவ்வளவு பாதிப்பு தருமா? தடை எப்போது?
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தமிழ் வரலாற்று படத்துல தமிழ் டைட்டில் கிடையாதா? ரசிகர்கள் ஆதங்கம்
சென்னை : மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் வரலாற்று பின்புலத்துடன் தயாராகி வருகிறது.
கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட இந்த படத்தின் சூட்டிங் தற்போது புதுச்சேரியில் மீண்டும் துவங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் லுக் வெளியாகியுள்ளது. சிறப்பான வகையில் இருந்தாலும் ரசிகர்கள் இதன்மூலம் அப்செட்டாகியுள்ளனர்.
மணிரத்னம் இயக்கம்
டைரக்டர் மணிரத்னத்தின் கனவு படமாக உருவாகி வருகிறது பொன்னியின் செல்வன். ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி உள்ளிட்டவர்களின் நடிப்பில் வரலாற்று பின்புலத்துடன் இந்த படம் உருவாகவுள்ளது. கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த படத்தின் சூட்டிங் தற்போது புதுச்சேரியில் மீண்டும் துவங்கியுள்ளது.
முதல் பாகம் வெளியீடு
தொடர்ந்து பலகட்ட படப்பிடிப்புகளை நடத்தி வரும் 2022 சம்மரில் படத்தின் முதல் பாகத்தை வெளியிட மணிரத்னம் முடிவு செய்துள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா புரொடக்ஷன்ஸ் கூட்டுத் தயாரிப்பில் உருவாகிவரும் இந்த படம் மிகவும் பிரமாண்டமான வகையில் உருவாகி வருகிறது.
ஆங்கிலத்தில் தலைப்பு
இந்நிலையில் தற்போது படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் இந்த படம் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இந்த டைட்டில் லுக்கில் ஆங்கிலத்தில் பிஎஸ் -1 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ரசிகர்கள் ஆதங்கம்
வரலாற்று பின்புலத்துடன் சோழர்களின் வரலாற்றை எடுத்துக்காட்டும் இந்த படத்தில் தமிழில் டைட்டில் இடம்பெறாதது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. உலக அளவில் ரசிகர்களை எட்டும்வகையில் படக்குழுவினர் ஆங்கிலத்தில் டைட்டிலை வெளியிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.