சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்கக் கோரி மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: இயக்குனர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மணிரத்னம் பழைய பன்னீர்செல்வமாக வந்துவிட்டார் என்ற ரேஞ்சுக்கு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள மணிரத்னத்தின் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்திற்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மிரட்டல் விடுத்த நபர், செக்கச் சிவந்த வனம் திரைப்படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையென்றால் அலுவலகம் குண்டு வைத்து தகர்க்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளார்.
இயக்குனர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் என்ற செய்தி கோலிவுட்டில் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











