Don't Miss!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- News மாயாவதியின் மாயவலை.. பாஜகவுக்கு 24 தொகுதிகளில் ஜாக்பாட்! பயந்து நடுங்கும் அண்ணன் மகன்!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மணி போட்ட கன்டிஷன்: பிள்ளைகளை 'பொத்தி' வைத்துள்ள கார்த்திக், ராதா!
மணிரத்னம் கார்த்திக் மகன் கௌதம் மற்றும் ராதாவின் இளைய மகள் துளசியை வைத்து கடல் படத்தை எடுத்து வருகிறார். மீனவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் எடுக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் ராமேஸ்வரத்தில் நடந்து வருகிறது. படம் துவங்கி இத்தனை நாட்களாகியும் அது குறித்த தகவல்கள் கசிந்துவிடாமல் மணி ரகசியமாக வைத்துள்ளார்.
மேலும் ஷூட்டிங் நடக்கும் இடங்களில் வெளியாட்கள் வருவதை தடுக்க தனியார் செக்யூரிட்டி நிறுவன ஆட்களை நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் மற்றும் ராதா தங்கள் பிள்ளைகளின் போட்டோக்களை வெளியிட்டு விளம்பரம் செய்ய விரும்பினர். ஆனால் அதற்கு மணிரத்னம் ஒத்துக்கொள்ளவில்லை.
படம் ரிலீஸாகும் வரை கௌதம், துளசியின் போட்டோக்களை எந்த பத்திரிக்கைகளிலும் வெளியிடக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இதனால் கார்த்திக் மற்றும் ராதா தங்கள் பிள்ளைகளை பொது நிகழ்ச்சிகள் ஏன் நண்பர்கள் வீடுகளுக்கு கூட அனுப்பாமல் பொத்தி பொத்தி வைத்துள்ளனர்.
சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த துளசி தன்னை போட்டோ எடுக்கக் கூடாது என்று ஸ்ட்ரிக்ட்டாகக் கூறிவிட்டார்.