Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
விஜய்யைத் தொடர்ந்து உதயநிதிக்கு உதவிய விஷால்!
சென்னை: உதயநிதியின் 'மனிதன்' தனியார் பேருந்தில் ஒளிபரப்பப்படுவதை அறிந்த விஷால் அதனைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்.
திருட்டு சிடியை ஒழிக்க விஷால் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சமீபத்தில் பெங்களூரில் இருந்து வந்த தனியார் பேருந்தில் 'தெறி' ஓடுவதைத் தெரிந்து காவல் துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுத்தார்.
இந்நிலையில் அவினாசியில் இருந்து வந்த தனியார் பேருந்து ஒன்றில் 'மனிதன்' திரைப்படம் ஓடுவதாக விஷாலுக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து விஷால், கார்த்தி இருவரும் போலீசில் புகார் கொடுத்தனர். நடிகர் ஸ்ரீமன் மேற்பார்வையில் மதுரவாயல் அருகே அந்தப் பேருந்தை தடுத்து நிறுத்தி போலீஸ் சோதனை செய்தனர்.
சோதனையில் 'மனிதன்' சிடியைக் கைப்பற்றி மதுரவாயல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
என்னுடைய 'மருது' திரைப்படத்திற்கு சிடி வெளியானால் நானே களத்தில் இறங்கி நடவடிக்கை எடுப்பேன், என விஷால் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.