Don't Miss!
- Finance முகேஷ் அம்பானி ஸ்டிரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- News சென்னை பள்ளிக்கரணை ஆணவக் கொலை! கணவரின் இறப்பால் சோகம்! கடிதம் எழுதி வைத்துவிட்டு மனைவி தற்கொலை!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விஜய்யைத் தொடர்ந்து உதயநிதிக்கு உதவிய விஷால்!
சென்னை: உதயநிதியின் 'மனிதன்' தனியார் பேருந்தில் ஒளிபரப்பப்படுவதை அறிந்த விஷால் அதனைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்.
திருட்டு சிடியை ஒழிக்க விஷால் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சமீபத்தில் பெங்களூரில் இருந்து வந்த தனியார் பேருந்தில் 'தெறி' ஓடுவதைத் தெரிந்து காவல் துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுத்தார்.
இந்நிலையில் அவினாசியில் இருந்து வந்த தனியார் பேருந்து ஒன்றில் 'மனிதன்' திரைப்படம் ஓடுவதாக விஷாலுக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து விஷால், கார்த்தி இருவரும் போலீசில் புகார் கொடுத்தனர். நடிகர் ஸ்ரீமன் மேற்பார்வையில் மதுரவாயல் அருகே அந்தப் பேருந்தை தடுத்து நிறுத்தி போலீஸ் சோதனை செய்தனர்.
சோதனையில் 'மனிதன்' சிடியைக் கைப்பற்றி மதுரவாயல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
என்னுடைய 'மருது' திரைப்படத்திற்கு சிடி வெளியானால் நானே களத்தில் இறங்கி நடவடிக்கை எடுப்பேன், என விஷால் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.