Don't Miss!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Technology ஏப்.22-24.. அடுத்த வாரம் அமோக வாரம்.. விற்பனைக்கு வரும் 3 புது 5G போன்கள்.. எல்லாமே ரூ.15,000.. எதை வாங்கலாம்?
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- News நிருபர் கேட்டாரே ஒரு கேள்வி.. வாயை கொடுத்து சிக்கிக் கொண்ட ராதிகா சரத்குமார்
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அமாவாசையை தந்த மணிவண்ணன்: எங்க மணியா இருக்கீங்க?
Recommended Video
சென்னை:இயக்குனர் மணிவண்ணன் இறந்து இன்றுடன் 5 ஆண்டுகள் ஆகிவிட்டது.
இயக்குனர், நடிகர் என்று அசத்தியவர் மணிவண்ணன். வில்லன் கதாபாத்திரமாகட்டும், நகைச்சுவை கதாபாத்திரமாகட்டும் சிறப்பாக நடிப்பார். அன்பான அப்பாவாக நடிப்பதில் மணிவண்ணனுக்கு நிகர் மணிவண்ணனே.
அவர் இறந்து இன்றுடன் 5 ஆண்டுகள் ஆகிறது.
அமாவாசை
மணிவண்ணன் என்ற பெயரை சொன்னதுமே பலருக்கும் நினைவுக்கு வருவது சத்யராஜின் அமாவாசை கதாபாத்திரம் தான். மணிவண்ணன் கண் முன்பே வளர்ந்து அவரையே மணியா என்று அழைப்பார். அந்த அமாவாசை கதாபாத்திரம் இன்றைய சூழலுக்கும் பொருந்தும் வகையில் அமைந்துவிட்டது.
பாரதிராஜா
தனது குருவான பாரதிராஜா ஆனந்த விகடனில் தன்னை பற்றி எழுதிய கட்டுரையை பார்த்துவிட்டு மனமுடைந்தார் மணிவண்ணன். அந்த வருத்தத்தில் இருந்தவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். மணிவண்ணனை பாரதிராஜா கொன்றுவிட்டார் என்று அப்போது பேசப்பட்டது.
சத்யராஜ்
மணிவண்ணனும், சத்யராஜும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் சேர்ந்து பணியாற்றிய படங்கள் அனைத்தும் ரசிகர்களின் மனம் கவர்ந்தவை. பெருந்தன்மையான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு மணிவண்ணன் பெயர் போனவர். நிஜத்திலும் பெருந்தன்மையான மனிதராக இருந்தவர்.
கவலை
மணிவண்ணனை இழந்து அவரது குடும்பத்தார் கவலையில் உள்ளனர். ஆண்டுகள் ஓடினாலும் அவரின் நினைவு மட்டும் அப்படியே உள்ளது. தந்தையாக நினைத்த மனிதரே தன்னை இப்படி பேசிவிட்டாரே என்ற வருத்தத்தில் சென்றுவிட்டார் மணிவண்ணன்.