Don't Miss!
- News "இப்போது தான் இந்திய குடிமகளாக உணர்கிறேன்.." முதல்முறையாக வாக்களித்த ஈழத்தமிழச்சி ஆனந்த கண்ணீர்
- Automobiles தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Sports 42 வயதில் 311 ஸ்ட்ரைக் ரேட்! டி20 உலககோப்பைக்கு வருகிறாரா தோனி? ஓய்வை ரத்து செய்ய கேட்க போகும் BCCI
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இன்ஸ்டாவில் இருந்து போட்டோவை நீக்கிய மஞ்சிமா..திருமணம் முடிவான பின்பு ஏன் இப்படி?
சென்னை : நடிகை மஞ்சிமா மோகனன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த புகைப்படத்தை திடீரென நீக்கி உள்ளார்.
மலையாள நடிகையான மஞ்சிமா மோகன், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே தனது அழகாலும், நடிப்பாலும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்த இவருக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வந்தன.
திருமணத்திற்கு தயாரான கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்..எப்ப கல்யாணம் தெரியுமா?
நடிகை மஞ்சிமா மோகனன்
நடிகை மஞ்சிமா விஷ்ணு விஷால் நடித்த எஃப்.ஐ.ஆர் படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இவர் பழம் பெரும் நடிகர் நவரச நாயகன் கார்த்திக்கின் மகனுடன் தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்த போது இருவரும் காதலிக்கத் தொடங்கினர் இவர்கள் இருவரின் காதல் விவகாரம் வெளியில் தெரிந்த போதும், இருவரும் வாய்திறக்காமல் இருந்த நிலையில் தற்போது இருவருக்கும் திருமணம் நிச்சயமாகி விட்டதாக தெரிவித்தனர்.
திருமண ஏற்பாடுகள் தீவிரம்
இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து தங்களது காதலை உறுதிப்படுத்தினர். இவர்களுக்கு நவம்பர் 28ஆம் தேதி இந்த திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் இருவீட்டாரும் திருமணத்திற்கான ஏற்பாடுகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் திருமண அழைப்பிதழ் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த திருமண அழைப்பிதழ் திரை உலக பிரபலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
புகைப்படம் நீக்கம்
இந்நிலையில், நடிகை மங்சுமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த பழைய புகைப்படங்களை திடீரென நீக்கியுள்ளார். இது குறித்து விளக்கமளித்துள்ள அவர், இந்த தளம் மக்களுடன் உரையாடுவதற்கு ஏற்ற தளம். இது எந்த அளவிற்கு அழகானதோ, அந்த அளவிற்கு ஆபத்தானது. அதனால் அந்த தளத்தில் இருந்த பழைய புகைப்படங்களை நீக்கியுள்ளேன். தற்போது என்னுடைய புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் இருப்பதை தவிர்க்கிறேன். இருப்பினும் விரைவில் புகைப்படம் பதிவிடுவேன் என்று கூறியுள்ளார்.
என்ன காரணம்
மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தனியாக இருந்த அனைத்து போட்டோக்களையும் டெலிட் செய்து விட்டு, கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் ஒன்றாக இருக்கும் போட்டோவை மட்டுமே வைத்துள்ளார். திருமணம் நெருங்கி வரும் இந்த நேரத்தில் எதற்காக இப்படி பழைய புகைப்படங்களை நீக்கியதற்கு காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.