ஒரு செல்ஃபிக்கு ஆசைப்பட்டு கடைசில இப்படி ஆகிப்போச்சே… புலம்பிய மனோபாலா !
சென்னை : நகைச்சுவை நடிகர் மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு செஃபியை பதிவிட, அது இப்போது பெரும் சர்ச்சையாக உருவாகி உள்ளது.
அந்த புகைப்படம் குறித்து மனோபாலா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
நான் சும்மாத்தான் இந்த செல்ஃபியை போட்டேன் இது இவ்வளவு வைரலாகும்னு நான் நினைக்கல என்று கூறியுள்ளார்.

உதவி இயக்குனராக
1970ல் பாராதி ராஜாவின் புதிய வார்ப்புகள் திரைப்படத்தில் உதவி இயக்குனராக தனது திரைப்பயணத்தை தொடங்கினார் மனோ பாலா. திரைப்படஇயக்குனர், தயாரிப்பாளர், நகைச்சுவை நடிகர் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

செம்பருத்தி சீரியலில்
பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் மனோ பாலா 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கி உள்ளார். இவர் தற்போது ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரில் நடித்து வருகிறார்.

யூ டியூப் சேனல்
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மனோபாலா நடிகர், நடிகைகளின் பிறந்த நாளுக்கு மறக்காமல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார். மேலும் இவர் வேஸ்ட் WastePaper என்ற பெயரில் யூ டியூப் சேனலையும் நடத்தி வருகிறார். இதில், அவ்வப்போது நிகழ்வுகள் குறித்து அவர் பேசியும் வருகிறார்.

செல்ஃபி சர்ச்சை
இந்நிலையில் நேற்று மனோ பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு செல்ஃபி புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். அந்த புகைப்படம் தான் தற்போது பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது. நான் நல்லத்தான் இருக்கேன் எனக்கு ஒண்ணுமில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

எனக்கு ஒண்ணுமில்லை
என் அன்பு மக்களே...நான் ஏதோ ஒரு photoவை போட அது இந்த லெவலுக்கு போகும்னு தெரியல. நான் நல்லாதான் இருக்கேன். ஒண்ணுமில்லை. அன்பு காட்டிய ( அப்படிதான் சொல்லணும்) அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள் என்று பதிவிட்டுள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











