Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
என் தாயே இறந்து போய் விட்டார் - நடிகர் மனோபாலா கண்ணீர்
சென்னை: என் தாயே இறந்து போய் விட்டார். இனிமேல் யார் இருக்கிறார் எங்களுக்கு என்று கண்ணீர் மல்கக் கூறியுள்ளார் இயக்குநரும், நடிகருமான மனோபாலா.
மறைந்த நடிகை மனோரமாவின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய மனோபாலா செய்தியாளர்களிடம் பேசுகையில், கடைசி வரை நடிப்பை விடாமல் தொடர்ந்தவர் ஆச்சி மனோரமா. மாலையிட்ட மங்கை தொடங்கி கடைசி வரை அவர் நடித்த படங்கள் அனைத்திலும் விதம் விதமாக நடித்து அனைவரையும் மகிழ்வித்தவர் அவர்.
அவரைப் போல ஒரு நடிகை இனிமேல் கிடைக்க மாட்டார். எந்தப் பாத்திரம் கொடுத்தாலும் அந்தப் பாத்திரமாகவே மாறி விடும் சிறப்பு பெற்றவர் மனோரமா.
கடைசி முறையாக என்னைப் பார்த்தபோது கூட மனோ மனோ என்று பாசமாக அழைத்து மகிழ்ந்தார். அனைவருடனும் பாசமாக பழகக் கூடியவர் மனோரமா.
மரணமடையும் முன்பு தனது தாயின் படத்தைப் பார்த்துள்ளார் மனோரமா. அப்படியே அவரது உயிர் பிரி்ந்துள்ளது. மனோரமாவின் தாயார் உயிருடன் இருக்கும்போது மனோரமா ஷூட்டிங் முடித்து வீடு திரும்பும் வரை வாசலிலேயே அமர்ந்திருப்பார் அவரது தாயார்.
எனது அம்மா இறந்து விட்டது போலவே உணர்கிறேன். இனிமேல் எங்களுக்கெல்லாம் யார் இருக்கிறார் என்று கண்ணீர் மல்கக் கூறினார் மனோபாலா.