Don't Miss!
- News "மேட்டர் ரொம்ப சீரியஸ்!" மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ! என்ன தான் நடக்குது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
என் தாயே இறந்து போய் விட்டார் - நடிகர் மனோபாலா கண்ணீர்
சென்னை: என் தாயே இறந்து போய் விட்டார். இனிமேல் யார் இருக்கிறார் எங்களுக்கு என்று கண்ணீர் மல்கக் கூறியுள்ளார் இயக்குநரும், நடிகருமான மனோபாலா.
மறைந்த நடிகை மனோரமாவின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய மனோபாலா செய்தியாளர்களிடம் பேசுகையில், கடைசி வரை நடிப்பை விடாமல் தொடர்ந்தவர் ஆச்சி மனோரமா. மாலையிட்ட மங்கை தொடங்கி கடைசி வரை அவர் நடித்த படங்கள் அனைத்திலும் விதம் விதமாக நடித்து அனைவரையும் மகிழ்வித்தவர் அவர்.
அவரைப் போல ஒரு நடிகை இனிமேல் கிடைக்க மாட்டார். எந்தப் பாத்திரம் கொடுத்தாலும் அந்தப் பாத்திரமாகவே மாறி விடும் சிறப்பு பெற்றவர் மனோரமா.
கடைசி முறையாக என்னைப் பார்த்தபோது கூட மனோ மனோ என்று பாசமாக அழைத்து மகிழ்ந்தார். அனைவருடனும் பாசமாக பழகக் கூடியவர் மனோரமா.
மரணமடையும் முன்பு தனது தாயின் படத்தைப் பார்த்துள்ளார் மனோரமா. அப்படியே அவரது உயிர் பிரி்ந்துள்ளது. மனோரமாவின் தாயார் உயிருடன் இருக்கும்போது மனோரமா ஷூட்டிங் முடித்து வீடு திரும்பும் வரை வாசலிலேயே அமர்ந்திருப்பார் அவரது தாயார்.
எனது அம்மா இறந்து விட்டது போலவே உணர்கிறேன். இனிமேல் எங்களுக்கெல்லாம் யார் இருக்கிறார் என்று கண்ணீர் மல்கக் கூறினார் மனோபாலா.