twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மனோரமா ஆச்சிக்கு கொள்ளுப்பேரன் பிறந்திருக்காராம்!

    By Mayura Akilan
    |

    1000 சினிமாக்களுக்கு மேல் நடித்து இன்னமும் இயக்குநர்கள் தேடிவரும் நடிகையாக இருக்கிறார் மனோரமா.

    ஆச்சியின் சமீபத்திய சந்தோசம் அவருக்கு கொள்ளுப் பேரன் பிறந்திருக்கிறார். இதனால் கூடுதல் உற்சாகத்தில் இருக்கிறார்.

    சினிமா மட்டுமல்ல 1000 நாடகங்களில் நடித்த பெருமையும் இவருக்குண்டு. சிலபல ஆபரேசன்கள்... முதுமையினால் ஏற்பட்ட தள்ளாமை இதனால் பட வாய்ப்புகளை மறுத்து வருகிறார். அவரைப் பற்றிய தெரியாத சில விசயங்களை படியுங்களேன்.

    அம்மன் கோவில் தரிசனம்

    அம்மன் கோவில் தரிசனம்

    இந்தியா முழுவதிலும் உள்ள 108 அம்மன் கோவில்களுக்குப் போய் தரிசனம் செய்து விட்டு வந்திருக்கிறார் மனோராமா. அதோடு அடிக்கடி முருகனின் அறுபடை வீடுகளுக்கும் போய்வருவாராம்.

    திருப்பதி ஏழுமலையான்தான்

    திருப்பதி ஏழுமலையான்தான்

    திருத்தணி, திருப்பதி, காளகஸ்தி மனோரமா அடிக்கடி போகும் ஸ்தலங்கள். எந்த பிரச்சினை என்றாலும் திருப்பதி ஏழுமலையானை வேண்டிக்கொள்வாராம்.

    பழைய பாடல்கள்

    பழைய பாடல்கள்

    உடல்நிலை சரியில்லாத நிலையிலும் சிங்கம் 2 படத்தில் நடித்த மனோரமாவிற்கு தற்போதும் வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றனவாம். மாலை நேரத்தில் டிவியில் பழைய பாடல்களை போட்டு கேட்டு ரசித்துக் கொண்டிருப்பாராம்.

    கொள்ளுப் பேரன்

    கொள்ளுப் பேரன்

    அத்வைத்ராம் என்பது கொள்ளுப் பேரனின் பெயர்.. தினசரி குளித்து முடித்துவிட்டு சாமிகும்பிட்டு குழந்தையின் நெற்றியில் விபூதி வைத்துவிட்டுதான் மறுவேலை பார்க்கிறார். நான்கு தலைமுறைகளை கண்ட ஆச்சி மனோரமாவிற்கு தற்போது குட்டிக் குழந்தையுடன்தான் பொழுது போகிறதாம்.

    English summary
    Veteran actress Manorama has become a great grandma as her son has become a grandfather.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X