நலமுடன் வீடு திரும்பினார் மனோரமா
சென்னை: பிரபல நகைச்சுவை நடிகை மனோரமா மருத்துவமனையிலிருந்து நலமுடன் வீடு திரும்பினார்.
நடிகை மனோரமா திடீர் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 30-ந் தேதி, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள். 6 நாட்கள் அவர் தீவிர சிகிச்சை பிரிவிலேயே வைக்கப்பட்டிருந்தார்.
மனோரமாவின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் காணப்பட்டது. முழுமையாக சீரானதும், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
அதன்பிறகும் அவர் 2 நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். அவர் பூரண குணம் அடைந்ததைத் தொடர்ந்து நேற்று வீடு திரும்பினார்.
திரையுலகினர் பலரும் அவரை நலம் விசாரித்தனர்.


Click it and Unblock the Notifications











