மனோரமா உடல்நிலையில் முன்னேற்றம்!
சென்னை: நடிகை மனோரமாவின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மனோரமாவுக்கு நேற்று முன்தினம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சுத் திணறலும் அதிகமாக இருந்தது.

இதையடுத்து ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளித்தனர். செயற்கை சுவாசமும் பொறுத்தப்பட்டது.
உடல் நிலை கவலைக்கிடமாகவே இருந்தது. உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினார்கள்.
மாலையில் இவரது உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனாலும் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பிலேயே அவர் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சில நாட்கள் மருத்துவமனையிலேயே அவர் இருப்பார் என தெரிகிறது.
மனோரமாவுக்கு ஏற்கனவே மூட்டு வலி இருந்தது. அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகும் பல்வேறு உடல் நிலைக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்தார் மனோரமா.


Click it and Unblock the Notifications











