Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மனோரமாவுக்கு தலையில் ஆபரேஷன்-கோமாவில் இல்லை என மகன் தகவல்
மனோரமாவுக்கு ஏற்கனே முழங்கால் வலி நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதற்காக அவர் கேரளா போய் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டார். அப்படியும் வலி தீரவில்லை. இதையடுத்து சென்னை திரும்பிய அவர் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். அதன் பின்னர் அவர் வீட்டிலேயே இருந்து ஓய்வெடுத்து வந்தார். படங்களில் நடிப்பதையும் கிட்டத்தட்ட நிறுத்தி விட்டார்.
இந்த நிலையில் 27ம் தேதி அவர் வீட்டு குளியலறையில் வழுக்கி விழுந்து விட்டார். அதில் அவருக்குத் தலையில் அடிபட்டது. உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர் கோமாவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியதால் மனோரமாவின் ரசிகர்கள் சோகமடைந்தனர். ஆனால் அதை மனோரமாவின் மகன் பூபதி மறுத்துள்ளார். அவர் கூறுகையில், மனோரமா கோமாவில் இல்லை. அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. ஸ்கேன் செய்து பார்த்ததில் ரத்தக்கசிவு இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதை அகற்ற செவ்வாய்க்கிழமை அறுவைச் சிகிச்சை செய்யப்படவுள்ளது என்றார் பூபதி.