Don't Miss!
- News பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில் பாதை எப்போது முடியும்? சரியாக கணித்தால் லைஃப் டைம் செட்டில்மெண்ட்
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வா வாத்தியாரே வூட்டாண்ட நீ வராங்காட்டி பாடலால் ஒரே இரவில் பெரிய பாடகியான மனோரமா
சென்னை: மனோரமா பொம்மலாட்டம் என்ற படத்திற்காக பாடிய வா வாத்தியாரே வூட்டாண்ட பாடலால் அவர் ஒரே நாளில் பிரபல பாடிகியாகிவிட்டார்.
மனோரமா 7 வயதிலேயே தியாகராஜ பாகவதரின் பாடல்களை அழகாக பாடி வந்துள்ளார். மேடை நாடகங்களில் நடித்து வந்த அவர் 1958ம் ஆண்டு ரிலீஸான மாலையிட்ட மங்கை படம் மூலம் சினிமா நடிகையானார்.
திரைத்துறையில் அவர் நடிப்பை தவிர தனது குரலாலும் ரசிகர்களை கவர்ந்தார்.
போகாதே போகாதே
ரத்த திலகம் படத்தில் கண்ணதாசன் எழுதிய போகாதே போகாதே என் கணவா என்ற பாடலை பாடினார் மனோரமா. அது தான் பெரிய திரையில் அவர் பாடிய முதல் பாடல்.
வா வாத்தியாரே
பொம்மலாட்டம் படத்தில் மனோரமா சென்னை பாஷையில் வா வாத்தியாரே வூட்டாண்ட நீ வராங்காட்டி நான் விட மாட்டேன் என்ற பாடலை பாடி நடித்தார். அந்த ஒரே பாடலில் அவர் மிகவும் பிரபலமான பாடகி ஆனார்.
பாட்டி சொல்லை தட்டாதே
பாண்டியராஜன், ஊர்வசி ஜோடியாக நடித்த படத்தில் ஹீரோவின் பாட்டியாக நடித்திருந்தார் மனோரமா. அந்த படத்தில் அவர் பாடிய டெல்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே என்ற பாடல் மிகவும் பிரபலம்.
மெட்ராஸை
மே மாதம் படத்தில் மெட்ராஸை சுத்திப் பார்க்கப் போறேன் பாட்டுக்கும் குரல் கொடுத்திருந்தார் மனோரமா. அவர் 100க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.