Don't Miss!
- News முஸ்லிம்களின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் குறைவு! சொல்வது அரசு டேட்டா! ஆனால் மோடி ஏன் அப்படி பேசினார்
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸைமிஸ் பண்ணிடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
"அதிரடி": மேக்கப்மேனுக்கு கேரவனா?.. கொந்தளித்த மன்சூர் அலிகான்.. ஸ்டிரைக் செய்த தொழிலாளர்கள்!
சென்னை: சென்னையில் நடந்த அதிரடி படத்தின் ஷூட்டிங்கின்போது திடீர் ரகளை ஏற்பட்டு விட்டது.
இதனால் படப்பிடிப்புக்கு வந்த பெப்சி தொழிலாளர்களை நடிகரும், படத்தின் தயாரிப்பாளருமான மன்சூர் அலிகான் அதிரடியாக விரட்டி விட்டு விட்டு வேறு சிலரை வரவழைத்துப் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தினார்.
மன்சூரன் அலிகான் திடீரென ஏதாவது படம் எடுப்பார். அவரே ஹீரோவாக நடிப்பார். ஏகப்பட்ட நடிகர்களைப் போட்டு படம் பிடிப்பார். தயாரிப்பாளரும் அவராகவே இருப்பார்.
அதிரடி நாயகன்
அந்த வகையில் தற்போது அதிரடி என்ற படத்தை தயாரித்து ஹீரோவாகவும் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ராதாரவியுடன்
இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆவடி பகுதியில் நடந்தது. அதில் மன்சூரும், ராதாரவியும் இணைந்து நடித்த காட்சிகளை சுட்டுக் கொண்டிருந்தனர்.
பஞ்சாயத்து
அப்போது திடீரென ஒரு பஞ்சாயத்தைக் கூட்டி விட்டனர். அதாவது படத்தின் மேக்கப்மேன் தனக்கு தனியாக கேரவன் தேவை என்று கேட்டுள்ளார். இதைக் கேட்டதும் மன்சூர் அலிகான் கொந்தளித்து விட்டாராம்.
மேக்கப்மேனுக்கு கேரவனா
மேக்கப்மேனுக்கு தனியா எப்படி கேரவன் தர முடியும், முடியவே முடியாது என்று கூறி விட்டாராம். மேலும் மேக்கப்மேன் திடீரென கூடுதல் சம்பளமும் கேட்டதாக தெரிகிறது. இதனால் மேலும் கடுப்பாகியுள்ளார் மன்சூர்.
எல்லாரும் ஓடிப் போய்டு
மேக்கப் மேனுக்கு ஆதரவாக படப்பிடிப்பில் கலந்து கொண்ட பெப்சி தொழிலாளர்களும் வேலை பார்க்க முடியாது என்று கூறியுள்ளார். இதனால் கோபமான மன்சூர் அலிகான் அத்தனை பேரையும் வெளியேறச் சொல்லியுள்ளார். கோபமாகவும் அவர்களிடம் பேசியுள்ளார். இதையடுத்து அனைவரும் வெளியேறி விட்டனர்.
நீங்க வாங்க பாஸ்
ஆனால் சற்றும் மனம் கலங்காத விக்கிரமாதித்தன் போல, வேறு சிலரை வரவழைத்துப் படப்பிடிப்பைத் தொடங்கி நடத்தினாராம் மன்சூர் அலிகான்.
தடை வருமோ...
விரைவில் பெப்சியிலிருந்து மன்சூருக்கு தடை வரலாம் என்று பேச்சு அடிபடுகிறது.