'களி திண்ண' வைத்த லொள்ளு தாதா!
மூட நம்பிக்கைகளுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறிக் கொண்டு எதையாவது பரபரப்பாக செய்வது லொள்ளு தாதா மன்சூரலிகான் வழக்கம்.
பூனையை குறுக்கே விடுவது, விதவை பெண்களை தாலி எடுத்து கொடுக்க செய்வது என ஏறுக்கு மாறாக தனது பட விழாக்களில் செய்து காட்டி விளம்பரம் தேடிக் கொள்வார்.
அவர் இப்போது உருவாக்கி வரும் 'லொள்ளு தாதா பராக் பராக்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை கிராமத்து கலாசாரப்படி புதுமையாக நடத்தினார்.
விழாவுக்கு வந்த அனைவருக்கும் களி, கேழ்வரகு கூழ் கொடுத்து வரவேற்றார்.
மீன் குவியலைப் போல் 'லொள்ளு தாதா பராக் பராக்' படத்தின் ஆடியோ சி.டி.க்களை ரோட்டில் குவித்துப் போட்டு குறைந்த விலைக்கு விற்பனை செய்தார்.
Comments


Click it and Unblock the Notifications
