Don't Miss!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
மன் கீ பாத் மோடி அவர்களே... இந்த 'மன்சூர் கீ பாத்'தையும் கேளுங்க!
மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பேசும் பிரதமர் மோடி, அந்த மக்கள் பேசுவதையும் கேட்க வேண்டும்.. இந்த ரூபாய் நோட்டு ஒழிப்பு திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு மாற்றம் குறித்த அறிவிப்பால் தமிழ்த் திரையுலகில் 1000 கோடிகளுக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் பழைய ரூபாய் நோட்டுகளை தியேட்டர்களில் அனுமதிக்க வேண்டும் என பிரதமருக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான் கூறுகையில், "பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் திரைப்பட தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மார்ச் 31-ந்தேதிவரை திரையரங்குகளில் பழைய ரூபாய் நோட்டுக்களை வாங்க அனுமதிக்க வேண்டும்.
கருப்பு பணத்துக்கு ஆதரவாகவோ, பிரதமர் மோடி அறிவிப்புக்கு எதிராகவோ இதை கூறவில்லை. சினிமா துறையின் நலன் கருதிதான் இதை சொல்கிறேன். அதை அனுமதித்தால் சினிமா தயாரிப்பாளர்கள் நஷ்டத்தில் இருந்து கொஞ்சமாவது தப்பிப்பார்கள். திரை உலகினர் ஒற்றுமையுடன் இந்த பிரச்சினையை அணுகாதது வருத்தம் அளிக்கிறது.
சொல்லப் போனால், மோடியின் அறிவிப்பு இந்து மதத்துக்கே விரோதமானது. இந்துக்கள் பணத்தைத்தான் மகாலட்சுமி, தனலட்சுமி என்றெல்லாம் வணங்குகிறார்கள். பணத்தை வைத்து வணங்குகிறார்கள். அப்படிப்பட்ட பணத்தை ஒழிக்கலாமா?," என்றார்.