Don't Miss!
- News வெறிச்சோடிய சென்னை சாலைகள்.. எல்லா பக்கமும் காலி ரோடு.. இதுதான் காரணமா? ஓட்டுப்பதிவு நாளில் இப்படியா
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
மன் கீ பாத் மோடி அவர்களே... இந்த 'மன்சூர் கீ பாத்'தையும் கேளுங்க!
மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பேசும் பிரதமர் மோடி, அந்த மக்கள் பேசுவதையும் கேட்க வேண்டும்.. இந்த ரூபாய் நோட்டு ஒழிப்பு திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு மாற்றம் குறித்த அறிவிப்பால் தமிழ்த் திரையுலகில் 1000 கோடிகளுக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் பழைய ரூபாய் நோட்டுகளை தியேட்டர்களில் அனுமதிக்க வேண்டும் என பிரதமருக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான் கூறுகையில், "பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் திரைப்பட தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மார்ச் 31-ந்தேதிவரை திரையரங்குகளில் பழைய ரூபாய் நோட்டுக்களை வாங்க அனுமதிக்க வேண்டும்.
கருப்பு பணத்துக்கு ஆதரவாகவோ, பிரதமர் மோடி அறிவிப்புக்கு எதிராகவோ இதை கூறவில்லை. சினிமா துறையின் நலன் கருதிதான் இதை சொல்கிறேன். அதை அனுமதித்தால் சினிமா தயாரிப்பாளர்கள் நஷ்டத்தில் இருந்து கொஞ்சமாவது தப்பிப்பார்கள். திரை உலகினர் ஒற்றுமையுடன் இந்த பிரச்சினையை அணுகாதது வருத்தம் அளிக்கிறது.
சொல்லப் போனால், மோடியின் அறிவிப்பு இந்து மதத்துக்கே விரோதமானது. இந்துக்கள் பணத்தைத்தான் மகாலட்சுமி, தனலட்சுமி என்றெல்லாம் வணங்குகிறார்கள். பணத்தை வைத்து வணங்குகிறார்கள். அப்படிப்பட்ட பணத்தை ஒழிக்கலாமா?," என்றார்.