Just In
- 15 min ago
பிறந்தநாள் அதுவுமா இமானுக்கு இன்ப அதிர்ச்சி.. சூர்யாவின் 40வது படத்தில் இவர் தான் இசையமைப்பாளர்!
- 46 min ago
பாஜக சார்பில் போட்டியிடுகிறேனா? எனக்கு அரசியல்னா என்னன்னே தெரியாதே.. பிரபல நடிகை பளிச்!
- 1 hr ago
இவ்ளோ க்ளோஸ் ஆகாதும்மா.. விக்னேஷ் சிவனுடன் ஓவர் நெருக்கத்தில் நயன்தாரா.. காண்டாகும் ரசிகர்கள்!
- 1 hr ago
திரும்பிச் செல்லுங்கள்.. படப்பிடிப்பில் விவசாயிகள் மீண்டும் ஆர்ப்பாட்டம்.. ஷூட்டிங் கேன்சல்!
Don't Miss!
- News
தலைநகர் டெல்லியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷம்... மூன்று பெண்கள் உள்பட 5 பேர் அதிரடி கைது!
- Sports
மைதானத்துல தான் ஆக்ரோஷமா இருப்பாரு... வெளியில அப்படி ஒரு பணிவு... ஜோஷ் பிலிப் பாராட்டு
- Finance
Budget 2021.. ஹெல்த்கேர் துறையில் ஒதுக்கீடு 40% வரை அதிகரிக்கலாம்.. எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Automobiles
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
“என்னை எவ்ளோ பேர் ஏச்சிருக்காங்க தெரியுமா”.. கஸ்தூரியின் அதிர வைக்கும் டிவிட்!
சென்னை: தான் வரி ஏய்ப்பு செய்ததில்லை என்றும், ஆனால் பலர் தன்னை பண விசயத்தில் ஏமாற்றியிருப்பதாகவும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
1990-களில் தமிழின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்தவர் கஸ்தூரி. ஆத்தா உன் கோவிலிலே, செந்தமிழ் பாட்டு, அமைதிப்படை, சின்னவர், புதிய முகம், இந்தியன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு சிலகாலம் ஒதுங்கி இருந்த அவர், சமீபத்தில் சிவாவின் தமிழ்ப்படம் 2வில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்.
|
டிவிட்டர்:
எப்போதும் சமூகவலைதளத்தில் பரபரப்பாக இயங்கி வரும் திரைப் பிரபலங்களில் கஸ்தூரியும் ஒருவர். சமூக, அரசியல் விவகாரங்கள் குறித்து அவ்வப்போது தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டு வருகிறார்.

மோசடி வாடிக்கை:
அந்தவகையில், காஞ்சீபுரம் கோவில் சிலை மோசடி விவகாரம் பற்றி சமீபத்தில் கஸ்தூரி டிவிட்டரில் பதிவு வெளியிட்டு இருந்தார். அதில் அவர், "அரசு துறைகள் என்றாலே லஞ்சம், மோசடி, திருட்டு என்பது வாடிக்கையாகி விட்டது'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

மீ பாவம்:
கஸ்தூரியின் இந்தப் பதிவிற்கு கமெண்ட் போட்டுள்ள ரசிகர் ஒருவர், ‘‘நீங்கள் நடித்து வாங்கிய சம்பளத்துக்கு உரிய வருமான வரி செலுத்தி இருக்கிறீர்களா?'' என அதில் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளித்த கஸ்தூரி, ‘‘நான் வரி ஏய்ச்சதில்லை. என்னை பலர் காசு விஷயத்துல ஏய்ச்சிருக்காங்க.

ஏமாற்றுப் பேர்வழிகள்:
பேசிய ஊதியத்தையே வாங்காம நாமம் போட்டுகிட்டதுதான் அதிகம். தமிழ் படம்-2 காட்டுறாங்களே, வெயிலு மழையில கஷ்டப்பட்டு பாடி ஆடி கடைசில மூணு ரூபா சம்பளம். அதுபோலத்தான்'' எனப் பதில் அளித்துள்ளார்.