Don't Miss!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர் கைது
Recommended Video
மும்பை: 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மராத்தி நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மராத்தி நடிகரும், இயக்குநருமானவர் மந்தர் குல்கர்னி(24). நாடக ஒர்க்ஷாப்புகளும் நடத்தி வருகிறார். அத்தகைய ஒர்க்ஷாப் ஒன்றுக்கு 17 வயது சிறுமி ஒருவர் வந்துள்ளார்.
கடந்த 16ம் தேதி குல்கர்னி அந்த சிறுமியை தனது வீட்டிற்கு வரவழைத்து பேசியுள்ளார். உன்னை என் நாடகத்தில் நடிக்க வைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் சில உடைகளை கொடுத்து அந்த சிறுமியை அணிந்து வரச் செய்து புகைப்படங்கள் எடுத்துள்ளார்.
பின்னர் பிகினியை கொடுத்து அணியுமாறு கூற சிறுமி அதிர்ச்சி அடைந்துள்ளார். அதற்கு குல்கர்னி சில பெண்களின் புகைப்படங்களை காட்டி பார், அவர்கள் எல்லாம் பிகினி அணிந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த சிறுமி பிகினி அணிந்து வர குல்கர்னி அவரை புகைப்படம் எடுத்துள்ளார். போட்டோஷூட் முடிந்த பிறகு வீட்டிற்கு சென்ற சிறுமி குல்கர்னி நடந்து கொண்ட விதத்தை தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.
உடனே அந்த சிறுமியின் தாய் டெக்கன் காவல் நிலையத்தில் குல்கர்னி மீது புகார் அளித்தார். அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த புனே போலீசார் கடந்த 23ம் தேதி குல்கர்னியை பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்தனர்.
குல்கர்னியிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.