Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கோவா திரைப்பட விழாவில் மராத்தி படங்களின் ஆதிக்கம்- தமிழ் ஒண்ணே ஒண்ணு!
கோவாவில் இப்போது நடந்து கொண்டிருக்கும் 45வது சர்வதேச திரைப்பட விழாவில் மராத்தி மொழித் திரைப்படங்களே அதிக அளவு பங்கேற்கின்றன.
மராத்தியில் வெளியாகி பெரும் வெற்றி கண்ட டைம் பாஸ், லாய் பாரி மற்றும் துனியாதாரி போன்ற படங்கள் இந்த முறை திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. இத்துடன் எஸ்ஸெல் விஷன் நிறுவனம் தயாரித்த எலிசபெத் ஏகதாசி, டாக்டர் பிரகாஷ் பாபா ஆம்தே, கில்லா, லோக்மான்ய கே யுக்புருஷ் ஆகிய நான்கு படங்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றன.
ஒரே நிறுவனம் தயாரித்த நான்கு படங்கள் இந்த விழாவில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
இவை தவிர, ஏக் ஹஸாராச்சி நோட், யெல்லோ போன்ற படங்களும் தேர்வாகியுள்ளன.
இந்த ஏழுபடங்கள் போக, திரைப்படமல்லாத பிரிவுக்கு மூன்று படங்கள் தேர்வாகியுள்ளன.
அவை: எ ரெய்னி டே, மித்ரா மற்றும் வித்யா. மொத்தம் 10 படங்கள் மராத்தியிலிருந்து பங்கேற்கின்றன.
மலையாளத்திலிருந்து 8 படங்களும் பெங்காலியிருந்து 5 படங்களும், அஸ்ஸாம் மொழிப் படங்கள் இரண்டும், தமிழ், கன்னடம், ஒரியா மொழிகளில் தலா ஒரு படமும் இந்த விழாவில் பங்கேற்கின்றன.