Don't Miss!
- News பரம்பரை வரி விதிப்போம் என்கிறது காங்கிரஸ்.. கஷ்டப்பட்டு சேர்த்த செல்வத்தை பறிக்க முயற்சி! விடாத மோடி
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கோவா திரைப்பட விழாவில் மராத்தி படங்களின் ஆதிக்கம்- தமிழ் ஒண்ணே ஒண்ணு!
கோவாவில் இப்போது நடந்து கொண்டிருக்கும் 45வது சர்வதேச திரைப்பட விழாவில் மராத்தி மொழித் திரைப்படங்களே அதிக அளவு பங்கேற்கின்றன.
மராத்தியில் வெளியாகி பெரும் வெற்றி கண்ட டைம் பாஸ், லாய் பாரி மற்றும் துனியாதாரி போன்ற படங்கள் இந்த முறை திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. இத்துடன் எஸ்ஸெல் விஷன் நிறுவனம் தயாரித்த எலிசபெத் ஏகதாசி, டாக்டர் பிரகாஷ் பாபா ஆம்தே, கில்லா, லோக்மான்ய கே யுக்புருஷ் ஆகிய நான்கு படங்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றன.
ஒரே நிறுவனம் தயாரித்த நான்கு படங்கள் இந்த விழாவில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
இவை தவிர, ஏக் ஹஸாராச்சி நோட், யெல்லோ போன்ற படங்களும் தேர்வாகியுள்ளன.
இந்த ஏழுபடங்கள் போக, திரைப்படமல்லாத பிரிவுக்கு மூன்று படங்கள் தேர்வாகியுள்ளன.
அவை: எ ரெய்னி டே, மித்ரா மற்றும் வித்யா. மொத்தம் 10 படங்கள் மராத்தியிலிருந்து பங்கேற்கின்றன.
மலையாளத்திலிருந்து 8 படங்களும் பெங்காலியிருந்து 5 படங்களும், அஸ்ஸாம் மொழிப் படங்கள் இரண்டும், தமிழ், கன்னடம், ஒரியா மொழிகளில் தலா ஒரு படமும் இந்த விழாவில் பங்கேற்கின்றன.