Don't Miss!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஓரேயோரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
கர்ணனை காட்டிய கையோடு வாரிசு நடிகரை இயக்கப்போகும் மாரி செல்வராஜ்.. யாருன்னு பாருங்க!
சென்னை: கர்ணன் படத்தை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் பிரபல வாரிசு நடிகரை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ், அடுத்ததாக தனுஷை வைத்து இயக்கிய படம் கர்ணன்.
இன்ஸ்டாகிராமில் 10 லட்சம் ஃபாலோயர்ஸ்... பவித்ர லட்சுமியின் நெகிழ்ச்சி பதிவு
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆன இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அடுத்த படம்..
பாக்ஸ் ஆபிசிலும் வசூலை குவித்து வருகிறது. இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் மாரி செல்வராஜ். மாரி செல்வராஜ் அடுத்து இயக்கவுள்ள படத்தில் நடிக்கும் நடிகர் குறித்தும் படத்தின் கதை குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.
துருவ் விக்ரம்
அதன்படி மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் நடிக்கிறார். இப்படத்தின் கதை தமிழக கபடி வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது. இப்படத்தின் மூலம் ஒருவரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார் துருவ்.
கார்த்திக் சுப்புராஜ் உண்மை சம்பவம்
தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வரும் துருவ் விக்ரம், அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் மாரி செல்வராஜின் படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ்நாட்டின் கிராமப்புறப் பகுதியிலிருந்து வரும் ஒரு இளைஞர் இறுதியில் விளையாட்டுக்காக நாட்டின் மிக உயரிய கவுரவத்தையும் கோல்டு மெடலையும் வென்ற உண்மை சம்பவத்தை வைத்து இப்படம் உருவாக்கப்படுகிறது.
மூன்றாவது படம்
இதற்காக விரைவில் துருவ் விக்ரம் அதற்கான பயிற்சியை மேற்கொள்வார் என தெரிகிறது. இந்தப் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் துருவ் விக்ரமின் மூன்றாவது படம் ஆகும்.