Don't Miss!
- News ஓட்டு போட சொந்த ஊர் போனவங்களுக்கு வந்த குட்நியூஸ்.. சென்னைக்கு இன்று முன்பதிவில்லா ஸ்பெஷல் ரயில்
- Finance சென்னை லயோலா-வில் படித்த அஜித்.. பெங்களூரிலேயே காஸ்ட்லியான இடத்தை வாங்கியிருக்கிறார்.. யார் இவர்..?
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மாரி செல்வராஜ் ரொம்ப மோசம்.. 50 டேக் எடுக்கிறார்... 'மாமன்னன்' பட அனுபவம் குறித்து உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இப்பொழுது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகிவரும் மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார்
உண்மை சம்பவங்களின் அடிப்படையில் படங்களை இயக்கி வரும் மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தையும் அதே பாணியில் இயக்கி வருவதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜ் 50 டேக் எடுக்கிறார் என படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.
தரமான இயக்குனர் என்ற முத்திரை
இயக்குநர் பா ரஞ்சித் இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் நீலம் புரோடக்சன் என்ற நிறுவனத்தின் மூலம் பல தரமான படங்களை தயாரித்து வருகிறார் அந்த வகையில் நீலம் புரோடக்சன் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இயக்குநர் ராமிடன் உதவி இயக்குநராக பல ஆண்டுகள் பணிபுரிந்த மாரி செல்வராஜ் முதல் படத்திலேயே தரமான இயக்குநர் என்ற முத்திரையைப் பதித்தார். பரியேறும் பெருமாள் வெளியாகி மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பல விருதுகளையும் வென்று குவித்தது
உண்மை சம்பவங்களை அடிப்படையாக
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலையும் அதற்கான நிதியையும் அனைவரும் புரியும் வகையில் இப்படத்தில் கூறியிருந்தது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்க இப்படத்தை கொண்டாடினார்கள். பரியேறும் பெருமாள் கொடுத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜ் அடுத்து இயக்கிய திரைப்படம் கர்ணன். தனுஷ் , லால்,ரஜிஷா விஜயன், யோகி பாபு,கௌரி கிஷன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருக்க இந்த படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த படமும் மாரி செல்வராஜ் க்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது
மாமன்னன்
இந்த நிலையில் பிரபல கபடி வீரர் குறித்த படத்தை துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்து இயக்கி வந்த மாரி செல்வராஜ் இப்பொழுது உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் மாமன்னன் என்ற படத்தை இயக்கி வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் நடிகர் வடிவேலு நடிக்கிறார். கர்ணன் படம் போலவே இந்த படமும் சமூகத்தில் உள்ள முக்கிய பிரச்சனைகளை அழுத்தமாகப் பேச உள்ளது.
50 டேக் எடுக்கிறார்
இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய உதயநிதி ஸ்டாலின் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடிக்கும்போது அருண்ராஜா காமராஜ் பரவாயில்லை 20 டேக் வரைக்கும் தான் எடுப்பார் ஆனால் மாரி செல்வராஜ் பயங்கரமா எடுக்கிறார். 50 டேக் வரைக்கும் எடுக்கிறார். ஒவ்வொரு வசனத்தையும் அவர் நடித்து காட்டி பார்த்து பார்த்து எடுக்கிறார். 60 நாளுக்குள் படத்தை முடித்துவிட முடியுமா என்பது இப்போது சந்தேகமாக உள்ளது என அந்த நேர்காணலில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.