Vaazhai Box Office: மாரி செல்வராஜின் பெரும் கண்ணீர்.. கைவிடாத பாக்ஸ் ஆஃபீஸ்.. வாழை முதல் நாள் வசூல்!
சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நேற்று அதாவது ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் வாழை. இந்தப் படத்தில் கலையரசன், நிமிலா விமல் மற்றும் திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் இயக்குநர் மாரி செல்வராஜின் பால்ய காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை மைய்யப்படுத்தி எடுத்துள்ளார். பலரது பாராட்டையும் பெற்றுள்ள வாழை படத்தின் முதல் நாள் வசூல் விபரம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
தமிழ் சினிமாவில் பல ஜனரஞ்சகமான இயக்குநர்களுக்கு மத்தியில், தமிழ் சினிமாவை கலை வடிவத்தில் உலகத்தரத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் சில இயக்குநர்கள் மட்டுமே உள்ளனர். அந்த வரிசையில் தான் சினிமாவில் அறிமுகமான முதல் படத்தில் இருந்து தனக்கான இடத்தை உருவாக்கியவர் மாரி செல்வராஜ். இவரது படங்கள் கலையாக மட்டும் இல்லமல், ஜனரஞ்சகமாகவும் ரசிக்கப்படுகின்றது. மேலும் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.

இவரது இயக்கத்தில் நேற்று அதாவது ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் வாழை. வாழை படத்தில் நடிகர்கள் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு இசை அமைப்பாளர் சந்தோஷ நாராயணன் இசை அமைத்துள்ளார். மேலும் படத்தினை முன்னரே பார்த்த பல இயக்குநர்கள் மாரி செல்வராஜை பாராட்டினர். குறிப்பாக இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில், பொதுவாக பலரும் மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் படத்தைத்தான் மிகவும் பிடித்த படம் எனக் கூறுவார்கள். கர்ணன் மற்றும் மாமன்னன் படத்தை அவ்வாறு கூறமாட்டார்கள். அதற்கு காரணம் கர்ணன் மற்றும் மாமன்னன் ஆகிய படங்களில் எதிர்த்து சண்டை போடுகின்றான், கேள்வி கேட்கின்றான் என்பதாலே அந்தப் படங்கள் குறித்து யாரும் பேசுவதில்லை எனக் கூறினார்.
மிஷ்கின்: இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், இந்தப் படம் மிகப் பெரிய அனுபவம். அக்கிரா குரோசோவா கூறும்போது, நீங்கள் இந்தியாவை புரிந்துகொள்ள வேண்டுமென்றால், 'பதேர் பாஞ்சாலி' படத்தை பாருங்கள் எனக் கூறுவார். ஆனால், நான் சொல்வேன், நீங்கள் தமிழ்நாட்டைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், 'வாழை' படத்தை பாருங்கள் எனக் கூறுவேன். வாழை, இது படம் அல்ல, பாடம் எனக் கூறினார்.

முத்தம் தந்த பாலா: அதேபோல் இயக்குநர் பாலா படத்தைப் பார்த்துவிட்டு, மாரி செல்வராஜை கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார். மேலும் மாரி செல்வராஜின் கரங்களாஇப் பற்றிக்கொண்டு அவருடன் நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டு இருந்தார். வாழை படத்தைப் பார்த்த நடிகர் சூரி, மாரி செல்வராஜ்க்கு முத்தங்களைக் கொடுத்துக் கொண்டே இருந்தார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
ராம்: இயக்குநம் மணி ரத்னம் பேசுகயில், படம் மிகவும் சிறப்பாக இருக்கின்றது எனவும், சினிமாவில் இந்தப் படம் மிகவும் வலுவான குரல் எனவும், மாரி செல்வராஜை நினைத்தால் பொறாமையாக இருக்கின்றது எனவும் கூறினார். இந்த வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவியது. மாரி செல்வராஜ் உதவி இயக்குநராக பணியாற்றிய, இயக்குநர் ராம் படம் குறித்தும், மாரி செல்வராஜ் குறித்தும் மிகவும் சிலாகித்து பேசினார். குறிப்பாக, மாரி செல்வராஜின் முதல் கதை இது. ஆனால் நான் தான், இந்தப் படத்தை தனது முதல் படமாக செய்ய வேண்டாம் எனக் கூறினேன். மாரி செல்வராஜிடம் பல கதைகள் உள்ளது எனக் கூறினார்.

வசூல் விபரம்: படத்தினை ஏற்கனவே விமர்சகர்கள் பலரும் பாராட்டி இருந்தனர். இந்நிலையில் படம் முதல் நாளில் பாக்ஸ் ஆபீஸில் மட்டும் ரூபாய் 1.3 கோடி வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இது மட்டும் இல்லாமல் படத்தினை ஏற்கனவே ஓடிடி தளத்திற்கு நல்ல விலைக்கு விற்றுவிட்டதாகவும், தியேட்டர் வசூல் என்பது மாரி செல்வராஜ்க்கு லாபத்தைத்தான் ஈட்டித்தரும் எனவும் கூறப்படுகின்றது. ஆனால் படத்தின் புரோமோசனில் பேசுகையில், "எனக்கு இந்த படம் எவ்வளவு பணம் சம்பாதித்துக் கொடுக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் நான் இந்தப் படத்தை எடுக்கத்தான் சினிமாவுக்கு வந்தேன். எனது பெரும் கண்ணீர்தான் இந்தப் படம்" என பல இடங்களில் குறிப்பிட்டிருந்தார்.



Click it and Unblock the Notifications











