Don't Miss!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
மனைவிக்கு சீமந்தம்.. சந்தோஷத்தில் மாரி செல்வராஜ்.. கோலாகலமாக நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சி!
சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் மனைவிக்கு கோலாகலமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இயக்குநர் பா. ரஞ்சித், கலையரசன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
வொர்க் மோடாம்.. விக்ரமின் கோப்ரா படத்தில் இணைந்த கிரிக்கெட் வீரர்.. வைரலாகும் போட்டோ!
அதன் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. இயக்குநர் மாரி செல்வராஜுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மனைவிக்கு சீமந்தம்
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கியுள்ள இயக்குநர் மாரி செல்வராஜ் மனைவி திவ்யா மாரி செல்வராஜுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றுள்ளது. தற்போது அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
இரண்டாவது குழந்தை
ஏற்கனவே நவ்வி என்கிற நாஸ்தென்கா எனும் மகள் உள்ள நிலையில், தற்போது மாரி செல்வராஜின் மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாகி உள்ளார். வெகு விரைவில் இயக்குநர் மாரி செல்வராஜிக்கு அழகான மகனோ அல்லது தேவதை போன்ற மகளோ பிறக்க அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.
பா. ரஞ்சித் நேரில் வாழ்த்து
இயக்குநர் ராமின் உதவி இயக்குநராக இருந்த மாரி செல்வராஜ், பா. ரஞ்சித் தயாரிப்பில் தனது முதல் படமான பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி பெரு வெற்றி பெற்றார். இந்நிலையில், வளைகாப்பு நிகழ்ச்சியில் இயக்குநரும் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பாளருமான பா. ரஞ்சித் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
வைரலாகும் புகைப்படங்கள்
மண்டபம் ஒன்றில் குடும்ப உறவுகள், நண்பர்கள், சினிமா பிரபலங்கள் சூழ நடைபெற்ற வளைகாப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பா. ரஞ்சித்துடன் நடிகர் கலையரசன் உள்ளிட்ட பிரபலங்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். புது மாப்பிள்ளை கணக்கா மாரி செல்வராஜும் மனைவியுடன் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
கர்ணன் வரான்
வரும் ஏப்ரல் மாதம் 9ம் தேதி திரையரங்குகளில் நடிகர் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் வெளியாகிறது. பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தை பார்க்க பலரும் ஆவலாக உள்ளனர். அசுரன் படத்திற்கு பிறகு கர்ணன் தனுஷுக்கு ஏகப்பட்ட விருதுகளை குவிக்கும் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த படம்
கர்ணன் படத்தை முடித்த நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் அடுத்ததாக சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். சியான் 60 படத்திற்கு பிறகு இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.