Just In
- 18 min ago
வீட்டின் அருகில் இருந்த வழிபாட்டு தலத்தை இடித்தாரா? நடிகர் விமல் மீது போலீசில் பரபரப்பு புகார்
- 21 min ago
ஒரு நாளுக்கு இவ்வளவு செலவு வைப்பதா? நடிகைகள் நயன்தாரா, ஆண்ட்ரியா மீது தயாரிப்பாளர் புகார்!
- 14 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 14 hrs ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
Don't Miss!
- News
முட்டி மோதிய பிரபு, ரவிக்குமார்.. இருவருக்கும் "ஓகே" சொன்ன சித்தாள்.. கடைசியில் நடந்த "அந்த" சம்பவம்
- Sports
"கப்பாவில்" ஆஸி.யை கதற வைக்கும் சுப்மான் "கில்லி".. தொடரும் ஆதிக்கம்.. எதிர்பார்க்காத டிவிஸ்ட்!
- Automobiles
ஸ்டைலு அள்ளுதே... டிவிஎஸ் எக்ஸ்எல்100-இன் புதிய வின்னர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தமிழினப் படுகொலையை உலகறியச் செய்த மேரி கால்வினின் வாழ்க்கை படமாகிறது
சென்னை: இலங்கைப் போரை உலகுக்கு காட்டிய பத்திரிகையாளர் மேரி கால்வினின் வாழ்க்கை ஹாலிவுட்டில் படமாகிறது.
யுத்தம் எனக்கு அவசியமில்லை. ஆனால் நான் யுத்தத்தைத் தேடிப் போகிறேன் என்றவர் அமெரிக்க பத்திரிகையாளர் மேரி கால்வின்.

விடுதலைப்புலிகளுக்கு எதிராக போரிடுகிறோம் என சூளுரைத்துவிட்டு ராஜபக்ஷே அரசு தமிழின அழிப்பை முனைப்பாக செயல்படுத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில் இலங்கைப் போரின் உண்மைகளை உலகறியச் செய்தவர்.
2001 ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்துகொண்டிருந்தபோது வன்னி பகுதிகளுக்கு செல்ல பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த தடைகளை பொருட்படுத்தாமல் உயிரைப் பணயம் வைத்து செய்தி சேகரித்தார் மேரி கால்வின். அமெரிக்காவில் பிறந்த மேரி கால்வின் இங்கிலாந்திலிருந்து வெளியாகும் பிரபல சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளிநாட்டு செய்தியாளராக பணியாற்றினார்.
உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து கொண்டிருந்த நேரத்தில், வன்னி பகுதியில் செய்தி சேகரித்துக்கொண்டு வெளியேறும்போது ராணுவத்தின் கண்ணில் பட்டுவிட்டார். கண்மூடித்தனமாக ராணுவத்தினர் சுட்டதில் இடது கண்ணை இழந்தார் மேரி. மேலும், இலங்கை ராணுவத்தினர் மேரியின் ஆடைகளைக் கிழித்து நிர்வாணமாக்கினர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் பற்றி சண்டே டைம்ஸ் பத்திரிகையில் எழுதிய மேரி, இலங்கை தமிழர்களை விட நான் ஒன்றும் பெரிதாக கொடுமையை அனுபவிக்கவில்லை என்றாலும் என்னுடைய அனுபவம் தமிழ் மக்களின் வேதனையைச் சொல்ல போதுமானது எனக் குறிப்பிடுகிறார்.
பிறகு அரபு நாடுகளிலும், ஐரோப்பாவின் கொசோவோ, ரஷ்யாவின் ஷெசென்யாவில் பணியாற்றிய மேரி, 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி சிரியாவில் கொல்லப்பட்டார். சிரியாவில் போர் நடந்தபோது செய்தி சேகரித்துக்கொண்டிருந்த மேரி, ஒரு கட்டடத்தின் மீது நிகழ்த்தப்பட்ட ராக்கெட் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். செய்தி சேகரித்த காகிதங்களையும், காலணிகளையும் எடுக்க ஓடியபோது ராக்கெட் தாக்குதலுக்கு பலியானார் மேரி. அவருடன் பிரெஞ்ச் பத்திரிகையாளர் ரெமி ஓச்லிக்கும் கொல்லப்பட்டார்.ஏறத்தாழ 26 வருடங்கள் பத்திரிகையாளரக பணியாற்றிய மேரி கால்வின், 17 வருடங்கள் போர்ச் சூழலிலேயே பெரும்பான்மையான நாட்களை கழித்துள்ளார்.
இறந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மேரி கால்வினின் வாழ்க்கை படமாக எடுக்கப்படுகிறது. எ பிரைவேட் வார் என்ற தலைப்பில் படமாக்கப்படுகிறது. சிட்டி ஆப் கோஸ்ட், எஸ்கேப் பயர் போன்ற படங்களை எடுத்த மேத்தீவ் ஹெய்ன்மேன் இப்படத்தை இயக்குகிறார். இதில் மேரி கால்வினாக டை அனதர் டே, கான் கேர்ள் படங்களில் புகழ்பெற்ற ரோசமண்ட் பைக் நடிக்கிறார். மேலும் தமிழ்ச்செல்வன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளரும் நடிகருமான ஷோபா சக்தி நடிக்கிறார்.