Don't Miss!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
நானெல்லாம் கஞ்சா அடிச்சிட்டிருந்தவனாக்கும்... பாக்யராஜ் பகீர் பேச்சு!
சென்னை : நானும் ஒரு காலத்தில் கஞ்சா அடிச்சிட்டு இருந்திருக்கேன் என்று மரிஜுவானா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கே. பாக்யராஜ் கூறினார்.
நேற்று சென்னையில் மரிஜுவானா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவுடன் சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு மரிஜுவானா படத்தின் இசை வெளியீட்டு விழா படத்தை பற்றிய தனது கருத்துகளையும் மற்றும் பல சுவாரஸ்யமான விசயங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
இயக்குனர் பாக்யராஜ் தற்போது பல இடங்களிலும் விழாக்களிலும் கலந்து கொண்டு தனது கருத்தையும் தனது வாழ்கை பற்றிய பல விசயங்களையும் பகிர்ந்து உள்ளார். நேற்று மரிஜுவானா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் 40 வருடங்களுக்கு முன் கஞ்சா அடித்திருக்கிறேன் என கூறினார்.
மரிஜுவானா என்பது கஞ்சாவின் ஆங்கில பெயராகும் அதை தான் படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர் படக்குழு. இந்த இசை வெளியீட்டு விழாவில் கஞ்சா அடித்ததை பகிர்ந்த பாக்யராஜ் , 40 வருடங்களுக்கு முன் செய்த தவறு என்பதால் தான் தைரியமாக தற்போது பகிர்கிறேன் என கூறினார் .
கஞ்சா சில சமயங்களில் சந்தோஷத்தை தரும் பல சமயங்களில் குழப்பத்தை தரும். அதற்கு சரியான கருத்தை கூறும் வகையிலே மரிஜுவானா படம் உருவாக்கபட்டிருக்கிறது என கூறினார். மரிஜுவானா படத்தின் பாடல்கள் தணிக்கை குழுவிடம் அனுமதி பெற்று தற்போது வந்திருப்பது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது என கூறினார் பாக்யராஜ். ஏனெனில் சென்சாரில் சில கடுமையான வரிகள் உள்ள பாடல்கள் இடம் பெற விடமாட்டார்கள் என கூறினார்.
மேலும் தற்போது விஜய் வீட்டில் நடந்த ஐடி ரைட்டு பற்றி பேசிய பாக்யராஜ் தாவணி கனவுகள் படத்தின் போது என் வீட்டிலும் ஐடி ரைட்டு நடந்தது என்று பகிர்ந்தார். தாவணி கனவுகள் வெளியீடு அன்று ஐடி ரைட்டு நடந்ததால் பாக்யராஜ் கட்டாயம் வீட்டை விட்டு வெளியே போகும் சூழ்நிலை ஏற்பட்டதாம் இதனால் அன்று முழுவதும் ஒரு வருமான வரிதுறை அதிகாரி நான் செல்லும் இடங்களிலெல்லாம் என்னுடனே வந்தார், சென்சார் அலுவலகம் முதல் மற்ற அலுவகங்கள் வரை கூடவே வந்தார் என தனது நினைவை கூறினார்.
ஒப்பந்தமான படத்திலிருந்து திடீர் நீக்கம்.. அந்த நடிகை மீது செம கோபத்தில் பெரிய இடத்து மருமகள்!
மேலும் வருமான வரிதுறைக்கு கேள்வி எழுப்பியுள்ள பாக்யராஜ் நாங்கள் வருமான வரி என்ற பெயரில் பல லட்சங்களை வரியாக கட்டுகிறோம் சில நேரங்களில் எங்களின் மார்கெட் கவிழ்ந்து விடும். அப்போது எங்களின் வாழ்வதாரத்திற்கு ஏற்றார்போல ஓய்வூதியம் கொடுக்க ஏதேனும் திட்டம் இருக்கிறதா என கேள்வி எழுப்பினார்.
Recommended Video
பாக்யராஜ் போன்ற பல பிரபலங்களுமே இதே போல கேள்வியை எழுப்பியுள்ளனர். மரிஜுவானா இசை வெளியீட்டில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் கே.ராஜனும் வருமானவரிதுறைக்கு பல கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்த இசைவெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கினும் கலந்து கொண்டார்.