Don't Miss!
- Finance டாடா பங்குகளை விற்ற ரேகா ஜுன்ஜுன்வாலா.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ஷாக்..!!
- News கோவை தேக்கம்பட்டியில் வாக்களித்தார் 108 வயது இயற்கை விவசாயி பாப்பம்மாள்!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கல்யாணத்தை வெறுக்கும் திரிஷா... மணக்கோலத்தில் பார்க்க ஆசைப்படும் அம்மா
சென்னை: கல்யாணம் என்றாலே கசப்புதான் நடிகை திரிஷாவிற்கு காரணம் அவரது வாழ்க்கையில் அடுத்தடுத்து ஏற்பட்ட கசப்பான சம்பவங்களால்தான் திருமணம் என்ற வார்த்தையை கேட்டாலே அலர்ஜியாவிடுகிறது. ராணா டகுபதியோடும் சில காலம் நட்புடன் இருந்தார். அந்த நட்பும் பாதியிலேயே முறிந்து போனது. 2015ஆம் ஆண்டில் வருண் மணியன் என்ற தொழிலதிபரோடு நிச்சயதார்த்தம் முடிந்தும் சில காரணங்களால் திருமணம் நடைபெறாமல் நின்று போனது. இதுபோன்ற சம்பவங்களால்தான் திருமணம் பற்றி பேசினாலே வெறுப்பாகி விடுகிறார் திரிஷா. அதே நேரம் மகளை மணக்கோலத்தில் பார்க்க ஆசைப்படுகிறார் அவரது அம்மா.
தமிழ் சினிமாவின் என்றென்றும் வசீகர நாயகி த்ரிஷா. கடந்த 15 வருடங்களாக முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர். கமல், விஜய், விக்ரம், விஜய் சேதுபதி, சூர்யா, ஜெயம் ரவி போன்ற பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தவர்.
நம்ம பக்கத்துக்கு வீட்டு பொண்ணு போன்ற யதார்த்தமான ஒரு முகம், நடிப்பு போலவே தெரியாத அளவிற்கு கதாபாத்திரத்தோடு ஒன்றிய நடிப்பு, எல்லோருடனும் அன்பாக பழகும் குணம் இவை அனைத்தும் த்ரிஷாவின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள்.
விஜய் சேதுபதியோடு இணைத்து நடித்த 96 திரைப்படம் வெற்றிகரமாக ஓடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்திற்கு பின்பு, தான் நடிக்கும் படங்களின் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளார் திரிஷா.
ஹீரோயின்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்ட படங்களில் பெரும்பாலும் நடித்து வந்தார். தற்போது, பரமபத விளையாட்டு, சுகர், கர்ஜனை, ராங்கி, 1818 என வரிசையாக பல படங்களில் ஒப்பந்தமாகி படுபயங்கர பிஸியான நடிகையாக உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அவரது வாழ்வில் அடுத்தடுத்து ஏற்பட்ட கசப்பான சம்பவங்களால் திருமணம் என்ற வார்த்தையை கேட்டாலே ஓட்டம் பிடிக்கிறார். 2015ஆம் ஆண்டில் வருண் மணியன் என்னும் தொழிலதிபரோடு நிச்சயதார்த்தம் முடிந்தும் சில காரணங்களால் திருமணம் நடைபெறாமல் நின்றது.
பின்னர் ராணா டகுபதியோடும் சில காலம் நட்புடன் இருந்தார். அதிலும் யார் கண் பட்டதோ தெரியவில்லை. சில பல கருத்து வேறுபாடுகளால் அந்த நட்பும் பாதியிலேயே முறிந்து போனது. இப்படி பல கசப்பான நிகழ்வுகளால் திருமணத்தை முற்றிலுமாக வெறுக்கிறார்.
திரிஷாவின் நிலையால் மிகுந்த மன உளைச்சலில் தவிக்கிறார் அவரது அம்மா. தனது மகளுக்கு காலா காலாத்தில் திருமணம் செய்து பார்க்க முடியவில்லையே என்று அவர் கவலையோடு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடிய விரைவில் த்ரிஷாவின் மனம் மாறி விடும் என்றும் அவரை மணக்கோலத்தில் பார்க்க ஆசையாக உள்ளது எனவும் அவரது நலம் விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.