Don't Miss!
- News போலி பத்திரம்.. ஆன்லைனிலேயே பத்திர மோசடியை கண்டுபிடிக்கலாமா? இதை கவனியுங்க.. தமிழக அரசு சபாஷ்
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தமிழ்நாடு முழுவதும் 400 தியேட்டர்களில் வெளியாகிறது விஷாலின் 'மருது'
சென்னை: தமிழ்நாடு முழுவதும் 400 தியேட்டர்களில் விஷாலின் 'மருது' திரைப்படம் பிரமாண்டமாக வெளியாகிறது.
விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி, ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'மருது'. கிராமத்துப் பின்னணியில் முத்தையா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.
படத்தை வாங்கியிருக்கும் ஐங்கரன் நிறுவனம் மே 20 ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடுகிறது. நடிகர் சங்க பிரச்சினைகளுக்குப் பின் ராதாரவி-விஷால் இணைந்து நடித்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது.
இந்நிலையில் இப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் இன்று தொடங்கியிருக்கிறது. வேறு பெரிய படங்கள் இல்லை என்றாலும் தேர்தல், மழை காரணமாக இப்படத்திற்கான டிக்கெட் பதிவு சற்று மந்தமாகவே உள்ளதாக கூறுகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 400 க்கும் அதிகமான தியேட்டர்களில் இப்படம் வெளியாகிறது. 'கதகளி' சுமாராக ஓடிய நிலையில் 'மருது' தனக்கு பிரேக் கொடுக்கும் என விஷால் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்.
விஷாலின் நம்பிக்கையை 'மருது' காப்பாற்றுமா?
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!