Don't Miss!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சுயஇன்ப காட்சிக்கு பஜனை பாடலா?: நடிகை, இயக்குனர் என்ன சொல்கிறார்கள்?
Recommended Video
மும்பை: சுய இன்ப காட்சிக்கு பஜனை பாடல் போன்று கருதப்படும் பாடலை பயன்படுத்தியது குறித்து இயக்குனர் கரண் ஜோஹார், நடிகை கியாரா அத்வானி ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.
பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் நெட்ஃபிளிக்ஸில் வெளியான தனது லஸ்ட் ஸ்டோரீஸ் குறும்படத்தில் நடிகை கியாரா அத்வானி சுயஇன்பம் அனுபவிக்கும் காட்சியில் கபி குஷி கபி கம் பாடலை பயன்படுத்தியது சர்ச்சையாகியுள்ளது.
சுயஇன்ப காட்சிக்கு பஜனை போன்று மதிக்கப்படும் பாடலை பயன்படுத்துவதா என்று அந்த பாடலை பாடிய லதா மங்கேஷ்கரின் குடும்பத்தார் கேள்வி எழுப்பியுள்ளனர்.
விளக்கம்
லஸ்ட் ஸ்டோரீஸ் மூலம் சுயஇன்பம் அனுபவிப்பது பற்றி விவாதம் நடந்து வருகிறது. அந்த காட்சியை கலாய்க்கிறார்கள், திட்டுகிறார்கள் ஆனால் சுயஇன்பம் பற்றி பேசுகிறோம் என்பதே பெரிய விஷயம் என்கிறார் கரண் ஜோஹார்.
பேச்சு
சுயஇன்பம் பற்றி பேசுவது பெரிய குற்றம் என்று மக்கள் நினைத்தனர். இந்நிலையில் இந்த படம் மூலம் மக்கள் சுயஇன்பம் பற்றி விவாதிப்பதை பார்க்க முடிகிறது என்று கரண் ஜோஹார் தெரிவித்துள்ளார்.
கியாரா
சுயஇன்பம் அனுபவிக்கும் காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும், காமெடியாக நடித்துவிடாதீர்கள் என்று கரண் ஜோஹார் என்னிடம் கூறினார். நானும் அவர் சொன்னபடியே நடித்தேன் என்று கியாரா அத்வானி கூறியுள்ளார்.
தவறு
பெண்கள் சுயஇன்பம் அனுபவிப்பது குறித்து பேசுவதை பாவம் என்று நினைத்த மக்கள் தற்போது சாதாரணமாக பேசுகிறார்கள். இந்த காட்சிக்கு போய் இவ்வளவு பெரிய சர்ச்சை எதற்கு என்று இனி வரும் காலங்களில் மக்கள் நினைப்பார்கள். ஒரு காலத்தில் முத்தக் காட்சிகள் பெரிய குற்றமாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்று முத்தக் காட்சிகள் எல்லாம் சாதாரணம் என்கிறார் கியாரா.