Don't Miss!
- Sports PBKS vs MI : என்னா அடி.. பீதியை கொடுத்திட்ட தம்பி.. அஷுதோஷ் சர்மாவை நேரடியாக பாராட்டிய அம்பானி மகன்!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திரையில் தெரியும் கணித மேதை “ராமனுஜன்” வாழ்க்கை!
சென்னை: கணிதத்தில் தலைசிறந்த மேதையாக விளங்கிய ராமனுஜர் பற்றிய திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
இத்திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் ராமனுஜர் பற்றிய சில உண்மைகளை நாமும் பார்க்கலாம். அத்திரைப்படத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் அறிவு ஜீவிகளாகப் பிறப்பவர்களுக்கு கிடைப்பதோ வலிகள்தான் என்பதை இப்படம் அப்பட்டமாக பிரதிபலித்துக் காட்டியுள்ளது.
கணிதத்தின் தலைவர்:
கணித மேதை என்று பிரிட்டிஷ் கணித நிபுணர் ஹார்டியால் அன்புடன் அழைக்கப்பட்டவர்தான் ராமனுஜன். இதில் கூட நாம் ஒன்றும் அவரை அப்படி முதலில் அழைக்கவில்லை என்பதுதான் உண்மை.
7 வயதிலேயே கணிதப்புலமை:
ஸ்ரீநிவாச ராமனுஜன்....1887இல் கும்பகோணத்தில் ஒரு ஏழை பிராமணக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தவர். 7 வயதிலேயே அவருடைய அசாத்திய கணிதப் புலமையால் கல்வி உதவி பெற்றவர்.
கல்வியில் தோல்வி:
கணிதத்தின் மேல் தீராக் காதல் கொண்ட ராமனுஜர் தன்னுடைய கல்லூரிக் கல்வியில் தோல்வி அடைந்தவர் என்றால் உங்களால் நம்ப இயலாதுதான்.
புரட்டிப் போட்ட தருணம்:
இதன்பின்னர் 1912 ஆம் ஆண்டில் மாத ஊதியம் தரும் கிளார்க் வேலையில் சேர்ந்தார். அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்ட தருணம் அப்போதுதான் துவங்கியது. அவருடைய கணித கோட்பாடுகளைப் படித்த ஜி.ஹெச் ஹார்டி வியந்தே போனார்.
பழமையால் பாழான வாழ்க்கை:
ஆனால், பழமைவாதிகளின் குடும்பத்தில் பிறந்ததாலும், பிராமணர்கள் கடல் தாண்டிப் போவதே மகாப்பாவம் என்ற இற்றுப்போன வரைமுறைகளாலும் ஒரு மகா சாதனையாளன், மண்குடிசையாய் சரிந்தே போனான் என்பதுதான் ராமானுஜரின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் பாடம்.
காசநோயால் மரணம்:
தன்னுடைய 32 வயதில் காசநோய் பாதிப்பால் மரணமடைந்த அந்த மகாமேதை ராமனுஜன் தான் இன்றைய ஏடிஎம் அட்டையின் சூத்திரத்திற்கே சூத்திரதாரி என்றாலும் நீங்களெல்லாம் நம்பப் போவதில்லை.
ஞானராஜ சேகரனின் படம்:
பாரதி, மோகமுள் போன்ற படங்களை இயக்கிய ஞானராஜ சேகரன் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் ராமனுஜராக பிரபல நடிப்புத் தம்பதிகளான ஜெமினி கணேசன் - சாவித்ரியின் பேரன் அபிநவ் வாழ்ந்துள்ளார். இது இவருக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியம் என்றே கூறவேண்டும்.
ராமனுஜன் – ஒரு சகாப்தம்:
ஒரு சகாப்தத்தின் வாழ்க்கையை இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு நம்மால் திரையிலாவது இதன் மூலம் காட்டமுடிந்ததே என்பதுதான் நமக்கான ஆறுதல்.