Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு சாதகம்
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
2 ஆண்டுகள் கழித்து இன்று கேமரா முன் நிற்கும் வடிவேலு
சென்னை: 2 ஆண்டுகள் கழித்து வடிவேலு இன்று படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
கோலிவுட்டில் காமெடியில் கலக்கிக் கொண்டிருந்தவர் வடிவேலு. அவரும், விவேக்கும் காமெடியில் கொடி கட்டிப் பறந்தனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வந்தது.
தேர்தலில் போட்டியிட்ட திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் குதித்தார் வடிவேலு.
வாயால் வந்தது வினை
பிரச்சாரத்தில் வடிவேலு தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை காச்சு காச்சுன்னு காச்சி எடுத்தார். தேர்தல் முடிந்து திமுகவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அதிமுக ஆட்சிக்கு வந்தது. மேலும் தேமுதிக எதிர்கட்சி ஆனது. அத்தோடு வடிவேலுவின் சினிமா வாழ்க்கைக்கு பிரச்சனையும் வந்தது. அவரை ஒப்பந்தம் செய்ய யாருமில்லாமல் போனது. பட வாய்ப்புகள் இல்லாமல் போயின.
2 ஆண்டுகளாக படமே இல்லை
தேர்தல் விவகாரத்தால் வடிவேலு கடந்த 2 ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்கவில்லை.
மீண்டும் வடிவேலு
2 ஆண்டுகளாக கேமராவுக்கு முன்பு வராத வடிவேலு ‘ஜெகஜால புஜ பல தெனாலிராமன் என்ற படத்தில் அதுவும் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
நாளை படப்பிடிப்பு துவக்கம்
ஏ.ஜி.எஸ். என்டர்டெய்னர்ஸ் சார்பில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஷ், கல்பாத்தி சுரேஷ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்குகிறது. நாளை வடிவேல் நடிக்கும் காட்சிகள் ஏவிஎம் ஸ்டியோவில் படமாக்கப்படுகிறது.