Don't Miss!
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- News அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி.. நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்.. அலறிய கடலூர்!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அசோக் செல்வன் நடிப்பில் வெளியான "மாயா" குறும்படம்... தீனி பட இயக்குனரின் படைப்பில்!
சென்னை : வித்தியாசமான கதைகளை தேடிப்பிடித்து நடித்து வருபவர் இளம் நடிகர் அசோக் செல்வன்.
Recommended Video
அந்த வகையில் சமீபத்தில் வெளியான தீனி தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியானது.
சாணி காகிதம்...வேற லெவல் மாஸ் ஸ்டில்லை வெளியிட்ட செல்வராகவன்
இந்த நிலையில் தீனி இயக்குனர் அனியுடன் மீண்டும் இணைந்து அசோக்செல்வன் நடித்துள்ள "மாயா" குறும்படம் கௌதம் மேனனின் ஒன்றாக யூடியூப் சேனலில் வெளியாகி உள்ளது.
பீட்சா 2
தமிழில் உள்ள இளம் நடிகர்களில் அதிக கவனம் பெற்று வருபவர் நடிகர் அசோக்செல்வன்.வித்தியாசமான கதைகளை தேடிப்பிடித்து நடித்து வரும் இவர் சூது கவ்வும் படத்தில் விஜய்சேதுபதியின் கேங்கில் ஒருவராக வெகுளித்தனமான கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். பின் பீட்சா 2 மூலம் கதாநாயகனாக தமிழில் அறிமுகமானார்.
தீனி
தெகிடி இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனை திரைப்படமாக ஆனது. இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் அனி ஐ வி சசி இயக்கத்தில் தீனி என்ற மென்மையான கதையில் நடித்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றிருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தீனி வெளியானது. இயக்குனர் அனி ஐ வி சசி பிரபல மலையாள இயக்குனர் ஐ வி சசியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
"மாயா" குறும்படம்
இந்நிலையில் மீண்டும் தீனி பட இயக்குனருடன் அசோக் செல்வன் இணைந்துள்ள " மாயா" குறும்படம் இப்பொழுது கௌதம் மேனனின் ஒன்றாக யூடியூப் சேனலில் வெளியாகி உள்ளது. ஒரு திரைப்படம் உருவாவதற்கு ஒவ்வொரு இயக்குனர்களும் ஒரு மாயமான பிம்பங்களை தங்களுக்குள்ளாகவே உருவாக்கி கதையை எழுதுகின்றனர் என்பதை மிகவும் இயல்பாக மாயா குறும்படம் காட்டியுள்ளது.
மீண்டும் காதல் கதையை
காதல் படங்களை இயக்கும் ஒரு இயக்குனர் அதிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக ஒரு கதையை எழுத வேண்டும் என யோசிக்க, வேறு கதை எதுவும் தோன்றாமல் மீண்டும் காதல் கதையை எழுத ஆரம்பிக்க மாயா என்ற கதாபாத்திரத்தை மையமாக கொண்டு கதையை எழுதுகிறார். அந்த மாயா கதாபாத்திரத்தில் நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ளார். ஒரே ஒரு வீட்டில் நடப்பது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மாயா குறும்படம் கடந்த 2017ம் ஆண்டு எடுத்து முடிக்கப்பட்டது. சிகாகோ சவுத் ஏசியன் பிலிம் பெஸ்டிவலில் மிகச் சிறந்த குறும்படமாக வெற்றி பெற்றது.
கொரோனா மீட்பு பணிக்கு
மாயா குறும்படத்தை வெங்கட்பிரபு, அஷ்வத் மாரிமுத்து, ரிது வர்மா, அனுபமா பரமேஸ்வரன், ஐஸ்வர்யா லட்சுமி,வாணி போஜன், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். தீனி பட இயக்குனரே இந்த குறும்படத்தை இயக்கியுள்ளார் என்பதால் தீனி படத்தின் சாயல் பெரும்பாலும் இதில் உள்ளது என ரசிகர்கள் கூறிவருகின்றனர். மேலும் மாயா குறும்படத்தின் மூலம் வரும் வருமானம் முழுவதும் கொரோனா மீட்பு பணிக்கு பயன்படுத்தப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
-
இதுக்கு இல்லையா சார் ஒரு முடிவு?.. மீண்டும் பைக் டூர் கிளம்பிட்டாரா அஜித்?.. அப்போ விடாமுயற்சி
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே