twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் அவ்வளவு செய்தும் என் பெயர் மீ டூவில் வராதது அதிர்ஷ்டம்: நடிகர் சர்ச்சை பேச்சு

    By Siva
    |

    மும்பை: நான் செய்ததை பார்த்த பிறகும் மீ டூவில் என் பெயர் வராதது அதிர்ஷ்டம் என்று தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா.

    பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் தெரிவித்ததை அடுத்து மீ டூ இயக்கம் சூடுபிடித்தது. இந்நிலையில் மீ டூ பற்றி நடிகர் சத்ருகன் சின்ஹா பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    ஆண்கள்

    ஆண்கள்

    இது மீ டூ நேரம். ஒரு வெற்றிகரமான ஆணின் தோல்விக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என்பதை வெட்கப்படாமல் சொல்லலாம். இந்த இயக்கத்தால் வெற்றிகரமான ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு பின்னால் பெரும்பாலும் பெண்கள் உள்ளனர்.

    மனைவி

    மனைவி

    நான் செய்ததை எல்லாம் தாண்டி என் பெயர் மீ டூ இயக்கத்தில் வெளியே வராததை பார்த்து நான் என்னை அதிர்ஷ்டசாலி என்றே கூற வேண்டும். நான் என் மனைவி சொல்வதை கேட்கிறேன். எந்த புகாரும் இல்லை என்றாலும் நான் என் மனைவியை பல நேரம் உடன் அழைத்துச் செல்கிறேன். பாருங்கய்யா, பாருங்கய்யா நான் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று காட்ட முடியும் அல்லவா.

    சத்ருகன் சின்ஹா

    சத்ருகன் சின்ஹா

    என் மனைவி பூனம் ஒரு பெண் கடவுள். அவர் தான் எனக்கு எல்லாமே. யாராவது என்னை பற்றி எதையாவது தெரிவிக்க விரும்பினாலும் தயவு செய்து சொல்லிவிடாதீர்கள் என்றார் சத்ருகன் சின்ஹா. சத்ருகன் சின்ஹாவின் பேச்சு பலருக்கும் பிடிக்கவில்லை.

    விமர்சனம்

    மீ டூ இயக்கத்தை கலாய்த்த சத்ருகன் சின்ஹாவை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்துள்ளனர். அமைதியாக இருங்கஜி என்று தெரிவித்துள்ளனர்.

    English summary
    Bollywood actor Shatrughan Sinha's speech about Me Too has not gone down well with people.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X