அன்று லக்ஷ்மி.. இன்று கார்த்திக் டயல் செய்த எண்.. மீடியா பக்கிரி என்ன சொல்லியிருக்கார் பாருங்க!
சென்னை: கவுதம் மேனனின் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படம் நெட்டிசன்களிடம் வறுபடுவது குறித்து பேசியிருக்கிறார் நம்ம மீடியா பக்கிரி.
கவுதம் வாசுதேவன் மேனன் இயக்கியிருக்கும் குறும் படம் கார்த்திக் டயல் செய்த எண். திரிஷா, சிம்பு நடித்திருக்கும் இந்தப் படம் ஏஆர் ரஹ்மான் இசையில் நல்ல லவ் ஃபீலிங்கை கொடுத்துள்ளது.

இந்தப் படத்தை பார்த்து பலர் பாராட்டினாலும் சில நெட்டிசன்கள் விளாசி தள்ளியுள்ளனர். கல்யாணம் ஆன பெண்ணிடம் நீ வேண்டும் என்று கூறுவதெல்லாம் கள்ளக்காதல் என சாடியிருக்கின்றனர்.
ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான லக்ஷ்மி குறும்படம் இப்படிதான் நெட்டிசன்களின் வசவுகளுக்கு ஆளானது. இந்நிலையில் கார்த்திக் டயல் செய்த எண்ணும் நெட்டிசன்களிடம் சிக்கி படாதபாடு பட்டு வருகிறது.
இதுகுறித்து பேசியிருக்கும் நம்ம மீடியா பக்கிரி, ஜெஸியின் அந்த இரண்டு குழந்தைகள் நாங்கதான் என ஒரே போடாக போட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் இதை ஒரு பொழுது போக்கு அம்சமாக மட்டும் பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











