Don't Miss!
- News வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கிவிட்டதாக போராடிய கோவை பாஜகவினர் கையில் ஓட்டு போட்ட மை!
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
செக்ஸ் டார்ச்சர் கொடுத்த மீடியேட்டரை செருப்பால் அடித்த பெண் தயாரிப்பாளர்
தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த மீடியேட்டர் சிவாவை செருப்பால் அடித்ததோடு போலீசிலும் புகார் தந்துள்ளார் 'காதலுக்கு கண்ணில்லை' படத்தின் பெண் தயாரிப்பாளர் இந்து.
ஜெய் ஆகாஷ் நடித்த ‘காதலுக்கு கண்ணில்லை' படத்தை தயாரித்தவர் ஒய்.இந்து. இவர் அந்த படத்துக்கு கதை, வசனமும் எழுதி முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். இந்த படம் இன்று வெளியாகியுள்ளது.
‘காதலுக்கு கண்ணில்லை' படத்தில் மீடியேட்டராக பணியாற்றியவர் சிவா. இவர், இந்துவுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வந்தாராம்.
தினமும் இரவில் இந்துவை போனில் தொடர்பு கொண்டு பேசிய சிவா, இந்துவிடம் ஆபாசமாகப் பேசி, செக்ஸ் உறவுக்கு அழைத்தாராம். நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறி இந்துவுக்கு, சிவா போனிலேயே பல நாட்கள் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
பொறுத்துப் பார்த்த இந்து அவர்கள் நேரில் அழைத்து சிவாவை கண்டித்து இருக்கிறார், அப்பொழுது திடீரென்று காரில் அமர்ந்திருந்த இந்துவைக் கட்டிப்பிடித்து முத்தமிட முயற்சித்திருக்கிறார் .இதனால் மேலும் கோபம் அடைந்த இந்து செருப்பால் அடித்து சிவாவை விரட்டியிருக்கிறார்.
இதுபற்றி இந்து நீலாங்கரை போலீசில் இன்று புகார் அளித்தார். அதில் சிவாவால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். அவர் என்னை தொட்டும் மானபங்கம் செய்துள்ளார். எனவே சிவா மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதுபற்றி இன்ஸ்பெக்டர் பாஸ்கர் விசாரணை நடத்தி வருகிறார்.
இதையறிந்த மீடியேட்டர் சிவா, தமிழகம் முழுவதம் ரிலீசாக வேண்டிய இந்தப் படத்திற்கு 'புக்' செய்யப்பட்ட தியேட்டர்களுக்கு போன் செய்து படத்தை இன்று 31-10-2014 ரிலீஸ் செய்ய விடாமல் தடுத்துவிட்டுத் தலைமறைவாகி விட்டாராம்.
தயாரிப்பாளர் சங்கம் மற்றும் மீடியேட்டர் சங்கத்திலும் சிவா மீது தயாரிப்பாளர் இந்து புகார் செய்திருக்கிறார்.