Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
உதவி இயக்குனருக்கு பளார் கொடுத்த மீனாட்சி... சிறைபிடித்த படக்குழுவினர்
சென்னை: படப்பிடிப்பில் உதவி இயக்குனரை நடிகை மீனாட்சி ஓங்கி அறைந்த சம்பவம் சினிமாவுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழில் கருப்பசாமி குத்தகைதாரர் படத்தின் மூலம் அறிமுகமான மீனாட்சி தொடர்ந்து ராஜாதி ராஜா, மந்திரப் புன்னகை போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது நேர்முகம் என்ற படத்தில் நடித்து வருகிறார். நேற்று இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது உதவி இயக்குநர் ஒருவரை நடிகை மீனாட்சி ஓங்கி அறைந்திருக்கிறார்.
இவர் அறைந்த வேகத்தில் அந்த உதவி இயக்குநர் மயக்க நிலைக்குச் சென்றுவிட அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் மீனாட்சி மன்னிப்பு கேட்கும்வரை அவரை விடமாட்டோம் என்று கூறி அவரை சிறைபிடித்தனர்.
கடைசியில் நடிகை மீனாட்சி மன்னிப்புக் கடிதம் எழுதி படக்குழுவினரிடம் மன்னிப்புக் கேட்ட பின்னரே அவரை படக்குழுவினர் விடுவித்து இருக்கின்றனர்.
இவர் அறைந்ததில் மயங்கி விழுந்த உதவி இயக்குனருக்கு தற்போது தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறதாம்.
நடிகை மீனாட்சி உதவி இயக்குனரை அறைந்த சம்பவமும், அவரை படக்குழுவினர் சிறைபிடித்த சம்பவமும் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.