Don't Miss!
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- News பிறந்தது சென்னை தான்.. ஆனா கன்னடா தெரியுமா? பிரசாரத்தில் தமிழர்களிடம் சிவராஜ் குமார் திடீர் கேள்வி
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
உதவி இயக்குனருக்கு பளார் கொடுத்த மீனாட்சி... சிறைபிடித்த படக்குழுவினர்
சென்னை: படப்பிடிப்பில் உதவி இயக்குனரை நடிகை மீனாட்சி ஓங்கி அறைந்த சம்பவம் சினிமாவுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழில் கருப்பசாமி குத்தகைதாரர் படத்தின் மூலம் அறிமுகமான மீனாட்சி தொடர்ந்து ராஜாதி ராஜா, மந்திரப் புன்னகை போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது நேர்முகம் என்ற படத்தில் நடித்து வருகிறார். நேற்று இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது உதவி இயக்குநர் ஒருவரை நடிகை மீனாட்சி ஓங்கி அறைந்திருக்கிறார்.
இவர் அறைந்த வேகத்தில் அந்த உதவி இயக்குநர் மயக்க நிலைக்குச் சென்றுவிட அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் மீனாட்சி மன்னிப்பு கேட்கும்வரை அவரை விடமாட்டோம் என்று கூறி அவரை சிறைபிடித்தனர்.
கடைசியில் நடிகை மீனாட்சி மன்னிப்புக் கடிதம் எழுதி படக்குழுவினரிடம் மன்னிப்புக் கேட்ட பின்னரே அவரை படக்குழுவினர் விடுவித்து இருக்கின்றனர்.
இவர் அறைந்ததில் மயங்கி விழுந்த உதவி இயக்குனருக்கு தற்போது தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறதாம்.
நடிகை மீனாட்சி உதவி இயக்குனரை அறைந்த சம்பவமும், அவரை படக்குழுவினர் சிறைபிடித்த சம்பவமும் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.