Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
உங்கள் வாழ்க்கை என் தயவில் கிடைத்தது.. அபிராமியை வெளுத்த மீரா மிதுன்..வெளியே வந்தும் ஓயாத சண்டை!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா மிதுனுக்கும் அபிராமிக்கும் இடையேயான சண்டை நாளுக்கு நாள் முற்றி வருகிறது.
மீரா மிதுன் அழகிப்போட்டி நடத்துவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்துள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பான புகார்கள் அவர் மீது குவிந்து கொண்டிருந்த நிலையில் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியானார் மீரா மிதுன். அப்போதே பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த சாக்ஷி, அபிராமி ஆகியோரின் முகம் மாறிவிட்டது.
"ஆக்ஷன் கலந்த குடும்ப செண்டிமெண்ட்".. ரஜினி 168 பற்றி முதன்முறையாக இயக்குநர் சிவா பேட்டி!
கேரியருக்கே வேட்டு
இதனை தொடர்ந்து மீரா மிதுனை, ஃபிராடு, ஏமாற்றுக்காரி என்றெல்லாம் வசைப்பாடினார்கள் அபிராமி மற்றும் சாக்ஷி ஆகியோர். இதனால் பிக்பாஸ் வீட்டில் ஒதுக்கப்பட்டார் மீரா மிதுன். இதைத்தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகள் மீராவின் கேரியருக்கே வேட்டு வைக்கும்படியாக இருந்தது தனிக்கதை.
|
பைத்தியமாக்க முயற்சி
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகும் மீரா மிதுன், அபிராமி, சாக்ஷி ஆகியோர் இடையேயான சண்டை ஓய்ந்த பாடில்லை. அபிராமி, சாக்ஷி ஆகியோர் தொழிலதிபர் ஜோ மைக்கெல்லுடன் சேர்ந்துகொண்டு தன்னுடைய மொபைல் நம்பரை தங்களின் தனிப்பட்ட குரூப்பில் பகிர்ந்துள்ளதாகவும், இதனால் தினமும் பலர் தனக்கு போன் செய்து மனரீதியாக துன்புறுத்துவதாகவும் தன்னை பைத்தியமாக்க முயற்சிப்பதாகவும் கூறினார் மீரா மிதுன்.
அபியை சீண்டிய மீரா
இதனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகும், அபிராமி, சாக்ஷி ஆகியோரிடையே பிரச்சனை இருப்பது தெளிவானது. இந்நிலையில் அபிராமியை சீண்டி டிவிட்டியிருக்கிறார் மீரா.
|
உங்களை எரித்துவிடும்
இதுதொடர்பான அவரது டிவிட்டில், அபிராமியின் மலிவான தந்திரம். ஒரு வாழ்க்கையை பெறுங்கள் ஜோ கேங்.. என்னிடம் பிரச்சனை வேண்டாம் என எச்சரிக்கிறேன். அபிராமி, நீ வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை என்னுடைய தயவில் கிடைத்தது. என்னை ட்ரோல் செய்வதற்காக உங்களின் பணத்தை இழக்காதீர்கள். என்னுடைய ரசிகர்கள் பட்டாளம் குறித்து உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன். வெறுப்பு உங்களை எரித்துவிடும். இவ்வாறு மீரா மிதுன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.