Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
பிரதமர் நிச்சயம் என் பிரச்சனையை கவனிப்பார்.. அடங்க மறுக்கும் மீரா.. இம்முறை மத்திய அமைச்சருக்கும்!
சென்னை: சென்னை போலீஸை கூண்டோடு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என பிரதமர் மோடியிடம் புகார் கூறிய நடிகை மீரா மிதுன் தற்போது மத்திய அமைச்சரிடமும் புகார் கூறியிருக்கிறார்.
நடிகை மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் தன்னை தவறாக தொட்டதாக குற்றம்சாட்டினார். ஆனால் அவரது குற்றச்சாட்டை குறும்படம் போட்டு பொய் என நிரூபித்தார் கமல்.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மீரா மிதுன், கிடைக்கும கேப்பில் எல்லாம் சேரன், கமல், பிக்பாஸ் போட்டியாளர்கள் என அனைவர் மீதும் குற்றம்சாட்டி வருகிறார்.
இந்நிலையில் தனக்கு வரும் போன் கால்கள் குறித்து புகார் அளித்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறிய மீரா மிதுன், தனக்கு அநீதி இழைத்த சென்னை போலீசாரை கூண்டோடு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என பிரதமர் மோடியை டேக் செய்து டிவிட்டியிருந்தார்.
இந்த தகவல் ஊடகங்களில் செய்தியாக வெளியானது. இதனை தொடர்ந்து மீண்டும் இவ்விவகாரம் குறித்து டிவிட்டியுள்ள மீரா மிதுன், பிரதமர் என் பிரச்சனையை கவனிப்பார் என நம்புகிறேன் என டிவிட்டியிருக்கிறார். மேலும் அந்த டிவிட்டை பிரதமர் அலுவலகமான பிஎம்ஓ இந்தியா, நரேந்திர மோடி, மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி உள்ளிட்டோரையும் டேக் செய்திருக்கிறார் மீரா மிதுன்.
Yes I did hope he pays heed to it bcos @narendramodi @PMOIndia belives in #BetiBachao @smritiirani @NCWIndia https://t.co/EAyou1HInt
— Meera Mitun (@meera_mitun) October 16, 2019
ஏற்கனவே மீரா மிதுனின் டிவிட்ஸையும் வீடியோக்களையும் பார்த்து மரண கலாய் கலாய்த்து வரும் நெட்டிசன்ஸ், இந்த டிவிட்டை பார்த்து, சீக்கிரம் ஒரு நல்ல மருத்துவரை போயி பாருங்கள் என டிவிட்டி வருகின்றனர்.
ஆமா நாட்டின் பிரதமர்க்கு வேற வேலை இல்லை பாரு....நீ சிகரெட் அடிக்கிறதுக்கும்...தண்ணி அடிக்கிறதுக்கும்...பண்ணுற தகராறு க்கும் பஞ்சாயத்து பண்ணுறது.அவர் வேலை யா..??
— Rowdy. GokuL (@gokul98401484) October 16, 2019
மேலும், நாட்டின் பிரதமருக்கு வேற வேலை இல்லை. நீங்கள் சிகரெட் அடிக்கிறதுக்கும், தண்ணி அடிக்கிறதுக்கும், பண்ணுற தகராறுக்கும் பஞ்சாயத்து செய்வதுதான் அவரின் வேலையா என கேட்டு கடுப்படித்து வருகின்றனர்.