Don't Miss!
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Finance வெயிலுக்கு ஏத்த பிஸ்னஸ்.. சும்மா சொல்லக்கூடாது முகேஷ் அம்பானி வேற லெவல்..! .
- News "உயர் ஜாதியினரிடம்" 41% ஆனால்.. முஸ்லிம்களிடம் 8% சொத்துக்கள்தான் உள்ளன: டேட்டா சொல்லும் உண்மை
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'நீயே ஒரு டுபாக்கூர்'.. மீரா மிதுன் பவரை பிடுங்கிய அரசு.. சோழமுத்தா போச்சா.. சிரிக்கும் நெட்டிசன்ஸ்!
குற்றப் பின்னணி இருப்பதால் ஊழல் தடுப்பு ஆணையத்தின் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் நடிகை மீரா மிதுன்.
சென்னை: ஊழல் தடுப்பு ஆணையத்தின் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் நடிகை மீரா மிதுன்.
சர்ச்சை நாயகி மீரா மிதுன் பற்றி தினமும் ஒரு செய்தியாவது வராமல் இருப்பதில்லை. ஏதாவது பேசி, யாரையாவது வம்பிழுத்து, கவர்ச்சியாக உடை அணிந்து என ஏதாவது ஒரு விஷயம் அவரை பற்றி செய்திகளில் வந்துவிடும்.
சீர்கெட்டுப்போயிருக்கும் தமிழ்நாட்டு அரசியலை தூக்கி நிறுத்தி, சுத்தம் செய்யப்போவதாக சமீபத்தில் சபதம் எடுத்தார் மீரா மிதுன். அவர் முதலில் ஒழிக்க நினைத்தது ஊழலை. அதற்காக மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தமிழ்நாடு மாநில இயக்குனராக சேர்ந்தார்.
பாலிவுட்டின் மஞ்ச காட்டு மைனா... கியாரா அத்வானியின் வெரி ஹாட் போட்டோஸ்!
ஊழல் தடுப்பு அதிகாரி
இதுதொடர்பாக ஊழல் தடுப்பு ஆணையம் தனக்கு வழங்கிய அடையாள அட்டையின் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் அதிர வைத்தார். மீரா மிதுனுக்கு எப்படி இந்த பதவி கிடைத்தது என ஆராய்ந்த போது, பணம் கட்டினால் யார் வேண்டுமானாலும் அந்த அட்டையை வாங்கலாம் என்பது தெரியவந்தது.
டம்மி பதவி
மீரா மிதுன் வகித்து வந்த ஊழல் தடுப்பு ஆணையத்தின் தமிழ்நாடு மாநில இயக்குனர் பதவிக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அரசு அதிகாரிகள் யாராவது லஞ்சம் கேட்டால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை தகவல் அளிக்கும் உரிமை மட்டுமே இருக்கிறது.
மீரா நீக்கம்
இந்நிலையில் அந்த டம்மி பதவியும் மீராவிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. மீராவுக்கு குற்றப் பின்னணி இருப்பதே அதற்கு காரணம். பல மோசடி வழக்குகளில் மீரா மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. அதற்கான காவல்துறை விடுவிப்பு சான்றிதழை மீரா சமர்ப்பிக்கவில்லையாம்.
அடுத்த அதிரடி
எனவே மீராவிடம் இருந்து ஊழல் தடுப்பு ஆணையத்தின் தமிழ்நாடு மாநில இயக்குனர் பதவியை பறித்து, அந்த ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆனால் இதற்கெல்லாம் அஞ்சாத மீரா, அடுத்த அதிரடியுடன் சீக்கிரம் வருவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.