Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விஷாலை மணந்தார் மீரா வாசுதேவன் நடிகை மீரா வாசுதேவனுக்கும், விஷாலுக்கும் சென்னையில் நேற்று திருமணம் நடந்தது. இதில் நடிகர்,நடிகைகள் கலந்து கொண்டு இருவரையும் வாழ்த்தினர்.ஏராளமான விளம்பரப் படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன். மும்பையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான மீரா வாசுதேவன்,உன்னைச் சரணடைந்தேன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் மீரா பிரகாசிக்கவில்லை. இந் நிலையில் அவருக்கும், ஒளிப்பதிவாளர்அசோக்குமாரின் மகன் விஷாலுக்கும் காதல் மலர்ந்தது. விஷால் அவரது தந்தை இயக்கிய காமா என்ற படத்தில் நாயகனாகநடித்துள்ளார். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்கவே திருமணம் நிச்சயமானது. இதன்படி, மீரா வாசுதேவன், விஷால்திருமணம் சென்னை வடபழனியிலுள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் நேற்று இரவு 7 மணிக்கு நடந்தது.இந்த திருமண நிகழச்சியில் இருவரது நெருங்கிய குடும்பத்தினர், மற்றும் முக்கியமானவர்கள் மட்டுமே அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. விரைவில் சென்னையில் வரவேற்பு நிகழச்சி நடத்தப்படுகிறது.நேற்று நடைபெற்ற திருமண விழாவில், நடிகர்கல் சிவகுமார், சத்யராஜ், பாண்டியராஜன், ஸ்ரீகாந்த் டைரக்டர் பி. வாசு மற்றும்நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.திருமணத்திற்குப் பிறகு திரையுலகை விட்டு விலக மீராவுக்கு விருப்பம் இல்லையாம். தனது கணவரின் அனுமதி கிடைத்துவிட்டதால் திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்றார் மீரா.
நடிகை மீரா வாசுதேவனுக்கும், விஷாலுக்கும் சென்னையில் நேற்று திருமணம் நடந்தது. இதில் நடிகர்,நடிகைகள் கலந்து கொண்டு இருவரையும் வாழ்த்தினர்.
ஏராளமான விளம்பரப் படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன். மும்பையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான மீரா வாசுதேவன்,உன்னைச் சரணடைந்தேன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் மீரா பிரகாசிக்கவில்லை. இந் நிலையில் அவருக்கும், ஒளிப்பதிவாளர்அசோக்குமாரின் மகன் விஷாலுக்கும் காதல் மலர்ந்தது. விஷால் அவரது தந்தை இயக்கிய காமா என்ற படத்தில் நாயகனாகநடித்துள்ளார்.
இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்கவே திருமணம் நிச்சயமானது. இதன்படி, மீரா வாசுதேவன், விஷால்திருமணம் சென்னை வடபழனியிலுள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் நேற்று இரவு 7 மணிக்கு நடந்தது.
இந்த திருமண நிகழச்சியில் இருவரது நெருங்கிய குடும்பத்தினர், மற்றும் முக்கியமானவர்கள் மட்டுமே அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. விரைவில் சென்னையில் வரவேற்பு நிகழச்சி நடத்தப்படுகிறது.
நேற்று நடைபெற்ற திருமண விழாவில், நடிகர்கல் சிவகுமார், சத்யராஜ், பாண்டியராஜன், ஸ்ரீகாந்த் டைரக்டர் பி. வாசு மற்றும்நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
திருமணத்திற்குப் பிறகு திரையுலகை விட்டு விலக மீராவுக்கு விருப்பம் இல்லையாம். தனது கணவரின் அனுமதி கிடைத்துவிட்டதால் திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்றார் மீரா.