விஷாலை மணந்தார் மீரா வாசுதேவன் நடிகை மீரா வாசுதேவனுக்கும், விஷாலுக்கும் சென்னையில் நேற்று திருமணம் நடந்தது. இதில் நடிகர்,நடிகைகள் கலந்து கொண்டு இருவரையும் வாழ்த்தினர்.ஏராளமான விளம்பரப் படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன். மும்பையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான மீரா வாசுதேவன்,உன்னைச் சரணடைந்தேன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் மீரா பிரகாசிக்கவில்லை. இந் நிலையில் அவருக்கும், ஒளிப்பதிவாளர்அசோக்குமாரின் மகன் விஷாலுக்கும் காதல் மலர்ந்தது. விஷால் அவரது தந்தை இயக்கிய காமா என்ற படத்தில் நாயகனாகநடித்துள்ளார். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்கவே திருமணம் நிச்சயமானது. இதன்படி, மீரா வாசுதேவன், விஷால்திருமணம் சென்னை வடபழனியிலுள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் நேற்று இரவு 7 மணிக்கு நடந்தது.இந்த திருமண நிகழச்சியில் இருவரது நெருங்கிய குடும்பத்தினர், மற்றும் முக்கியமானவர்கள் மட்டுமே அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. விரைவில் சென்னையில் வரவேற்பு நிகழச்சி நடத்தப்படுகிறது.நேற்று நடைபெற்ற திருமண விழாவில், நடிகர்கல் சிவகுமார், சத்யராஜ், பாண்டியராஜன், ஸ்ரீகாந்த் டைரக்டர் பி. வாசு மற்றும்நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.திருமணத்திற்குப் பிறகு திரையுலகை விட்டு விலக மீராவுக்கு விருப்பம் இல்லையாம். தனது கணவரின் அனுமதி கிடைத்துவிட்டதால் திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்றார் மீரா.
நடிகை மீரா வாசுதேவனுக்கும், விஷாலுக்கும் சென்னையில் நேற்று திருமணம் நடந்தது. இதில் நடிகர்,நடிகைகள் கலந்து கொண்டு இருவரையும் வாழ்த்தினர்.
ஏராளமான விளம்பரப் படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன். மும்பையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான மீரா வாசுதேவன்,உன்னைச் சரணடைந்தேன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் மீரா பிரகாசிக்கவில்லை. இந் நிலையில் அவருக்கும், ஒளிப்பதிவாளர்அசோக்குமாரின் மகன் விஷாலுக்கும் காதல் மலர்ந்தது. விஷால் அவரது தந்தை இயக்கிய காமா என்ற படத்தில் நாயகனாகநடித்துள்ளார்.
இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்கவே திருமணம் நிச்சயமானது. இதன்படி, மீரா வாசுதேவன், விஷால்திருமணம் சென்னை வடபழனியிலுள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் நேற்று இரவு 7 மணிக்கு நடந்தது.
இந்த திருமண நிகழச்சியில் இருவரது நெருங்கிய குடும்பத்தினர், மற்றும் முக்கியமானவர்கள் மட்டுமே அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. விரைவில் சென்னையில் வரவேற்பு நிகழச்சி நடத்தப்படுகிறது.
நேற்று நடைபெற்ற திருமண விழாவில், நடிகர்கல் சிவகுமார், சத்யராஜ், பாண்டியராஜன், ஸ்ரீகாந்த் டைரக்டர் பி. வாசு மற்றும்நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
திருமணத்திற்குப் பிறகு திரையுலகை விட்டு விலக மீராவுக்கு விருப்பம் இல்லையாம். தனது கணவரின் அனுமதி கிடைத்துவிட்டதால் திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்றார் மீரா.


Click it and Unblock the Notifications