Don't Miss!
- News தமிழ்நாட்டில் இருந்து வந்து.. கர்நாடகாவில் குண்டு வைத்துள்ளனர்.. பாஜக அமைச்சர் பரபரப்பு பேச்சு
- Education இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் பங்கேற்க ஆசையா...!!
- Sports IPL - சிஎஸ்கேவில் களமிறங்கிய வங்கதேச புலி.. நேற்று காயமடைந்த நிலையில், இன்று சென்னைக்கு வந்தார்
- Technology தட்டித்தூக்கும் விலை.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரெசிஸ்டன்ஸ்.. 14 நாட்கள் பேக்கப்.. எந்த மாடல்?
- Finance தேர்தல் பத்திரம்: தனிநபர்கள் நன்கொடை செய்த ரூ.358.91 கோடி.. முதல் இடத்தில் யார் தெரியுமா..?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
நீண்ட இடைவெளிக்கு பிறகு.. மீண்டும் மீஷா கோஷல்!
சென்னை : நீண்ட இடைவெளிக்கு பிறகு மீஷா கோஷல் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார்.
நடிகை மீஷா கோஷல் தமிழ் சினிமாவில் அதிகபடியான துணை வேடங்களில் நடித்து வந்தவர். மீஷா குறும்படங்களின் வாயிலாக சினிமாவில் நடிக்க துவங்கியவர். இவர் சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் போது கூட பல துணிச்சலான கதாபாத்திரங்கள் குறும்படங்களில் கிடைத்த போது நடித்து அசத்தியவர் .
மீஷா கடைசியாக மெர்சல் படத்தில் தான் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு இவருக்கு சரியான வாய்ப்புகள் சினிமாவில் கிடைக்கவில்லை. இதனால் இவர் இரண்டு வருடங்கள் நடிக்காத நிலை ஏற்பட்டிருந்தது.
இந்த இரண்டு வருடங்களில் இவர் உடற்பயிற்சி போட்டோசூட் என்றே நேரங்களை செலவிட்டு வந்தார். தனது இயல்பான செயல்களையும் புதிதான விசயங்களையும் தவறாமல் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார்.
நீச்சல் போட்டிகளில் ஆர்வம் உடைய இவர் சென்னையில் நடைபெற்ற ஒரு நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி செலிபிரிட்டி பேட்மிட்டன் லீக் என்று நடைப்பெற்ற சினிமா பிரபலங்கள் கலந்து கொண்ட பேட்மிட்டன் போட்டிகளிலும் கலந்து கொண்டு தனது சிறந்த திறமையை காண்பித்து அசத்தினார்.
மீஷா யாழ் என்ற இலங்கை தமிழ் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார் இந்த படம் பல வருடங்களுக்கு முன்பே வெளியாக வேண்டிய படம் ஆனால் பல போராட்டங்களை சந்தித்து 2017ல் வெளியானது. பெரிய பட்ஜெட் படம் இல்லை என்பதனால் இந்த படம் மக்களை சென்று சேரவில்லை ஆனால் பார்த்தவர்கள் வரையில் மீஷாவின் நடிப்பு சிறப்பாக இருந்தது என்று கூறினார்கள் .
மீஷா தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். ஹரி பாஸ்கர் மற்றும் சஞ்சனா நடித்து வரும் நினைவோ ஒரு பறவை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் மீண்டும் நடித்து வருவதை அடுத்து இவரின் நட்பு வட்டாரங்கள் அனைவரும் இவரை வாழ்த்தி வருகிறார்கள். பல ரசிகர்களும் இணையம் வாயிலாக வாழ்த்தி வருகின்றனர்.