துரந்தர் 2வில் தாவூத் இப்ராகிம் கதாபாத்திரத்தில் நடித்தது யாரு தெரியுமா?.. அவரோட ஆதங்கத்தை பாருங்க!
மும்பை: 'தூரந்தர்: தி ரிவெஞ்ச்' திரைப்படத்தின் முக்கிய தகவல்கள் மற்றும் ஸ்பாய்லர்களை இங்கே ரிவீல் செய்ய உள்ளோம். எனவே, படத்தைப் பார்க்காதவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் படிக்கலாம். அல்லது ஸ்கிப் செய்து விடலாம்.
அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் படமான 'தூரந்தர்: தி ரிவெஞ்ச்' மூலம் நடிகர் டேனிஷ் இக்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதில் அவர் 'படே சாப்' (பெரிய பாய்) என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் குறித்த குறிப்பும் இப்படத்தில் உள்ளது. பட வெளியீட்டிற்குப் பிறகு தான் பெறும் அன்புக்கும், பாராட்டுகளுக்கும் டேனிஷ் இக்பால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்தியா டுடேவுக்கு அளித்த நேர்காணலில், 'தூரந்தர்: தி ரிவெஞ்ச்' படத்தில் மற்ற அம்சங்களை விட கதாபாத்திரங்கள் மீது ஆர்வம் குறைவு என்று டேனிஷ் இக்பால் தெரிவித்தார். "கடந்த மூன்று மாதங்களில் பல சமயங்களில் கையை உயர்த்தி 'நான் தான் படே சாப்' என்று சொல்ல ஆசைப்பட்டேன். இதை உலகிற்குத் தெரிவிக்க விரும்பினேன், ஆனால் கடைசி வரை ரகசியம் காக்க வேண்டும் என்பதால் அப்படியே இருந்துவிட்டேன்," எனக் கூறினார்.
டேனிஷ், கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்பை 2024 ஆம் ஆண்டிலும், சில காட்சிகளை கடந்த ஆண்டிலும் நடத்தியதாகக் குறிப்பிட்டார். அந்த கதாபாத்திரத்தில் தன்னை பார்ப்பது ஒரு வித்தியாசமான அனுபவம் என்றார். "நீங்கள் உங்கள் தீவிரத்தையும், சில நுட்பமான விவரங்களையும் சேர்க்க வேண்டும்... நான் அதில்தான் கவனம் செலுத்தினேன். நான் ஒரு பயிற்சி பெற்ற நடிகர், இது போன்ற சூழ்நிலைகளை எப்படி கையாள்வது என்று எனக்குத் தெரியும்," என அவர் விளக்கினார்.
இயக்குநர் ஆதித்யா தர் உடைய வழிகாட்டுதல் மிகவும் உறுதுணையாக இருந்ததை டேனிஷ் நினைவு கூர்ந்தார். "ஆதித்யா சார் அருகிலேயே இருந்தார், அவரது வழிகாட்டுதலின் கீழ் நாங்கள் ஒரு நல்ல வேலையைச் செய்தோம் என்று நினைக்கிறேன்," என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ரன்வீர் சிங் "அற்புதமான" நடிப்பை வழங்கியதாக டேனிஷ் இக்பால் புகழ்ந்தார். படக்குழுவுடன் இருந்த அனுபவம் பற்றி அவர், "அவர்களில் ஒருவராக இருப்பது மறக்க முடியாதது. ஆனால், ஒரு கதாபாத்திரமாக மாறும்போது எல்லாவற்றையும் மறந்துவிடுவோம். எனினும், அவர்கள் எல்லோரும் மிகவும் நல்ல, அன்பான மனிதர்களாக இருந்தனர்," என்று பகிர்ந்துகொண்டார்.
இயக்குநர் ஆதித்யா தர் தொடர்ந்து பெரிய படங்களை இயக்கியதற்காக டேனிஷ் இக்பால் பாராட்டினார். ஆதித்யாவை தொலைநோக்கு பார்வையாளராக வர்ணித்த அவர், "நிறைய ஹொம் வொர்க் செய்கிறார், தனக்கு என்ன வேண்டும் என்பதை அறிவார். மக்களின் எதிர்பார்ப்புகளால் திசைதிருப்பப்படுவதில்லை. அவர் ஒரு சிறந்த இயக்குநர், அருமையான தொலைநோக்கு பார்வை கொண்டவர்! அவருடன் பணிபுரிந்ததை நான் மிகவும் ரசித்தேன்," என்று சொன்னார்.
ஆதித்யா தர் இயக்கிய 'தூரந்தர்: தி ரிவெஞ்ச்' திரைப்படம், வெளியான முதல் நாளிலேயே ₹100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதன் மூலம், ஷாருக் கானின் 'ஜவான்' மற்றும் பிரபாஸின் 'கல்கி' போன்ற முன்னணி படங்களின் முதல் நாள் வசூல் சாதனைகளை இது முறியடித்துள்ளது.
ரன்வீர் சிங், சஞ்சய் தத், ஆர். மாதவன், அர்ஜுன் ராம்பால், ராகேஷ் பேடி, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்த இந்தப் படம் 2026 ஆம் ஆண்டு மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.


Click it and Unblock the Notifications











