Don't Miss!
- News ‘ஒலி வாங்கி’ கட்சி சின்னத்தை தமிழில் சொன்னால் மக்களுக்கு புரியவில்லை.. நாம் தமிழர் சீமான் வேதனை
- Sports விளையாட்டு காட்றீங்களா? களத்திலேயே ஹர்திக், ரோகித்தை திட்டிய ஆகாஷ் அம்பானி.. சமாதானம் செய்த சச்சின்
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
நடிப்பில் பிசி.. கோபத்தில் மலேசியா பறந்த காதலர்.. பாதியில் நின்றது பிரபல நடிகையின் திருமணம்!
ரோஜா சீரியல் நடிகை பிரியங்காவின் திருமணம் நின்றுவிட்ட விஷயம் தெரியவந்துள்ளது.
Recommended Video
சென்னை: பிரபல மெகா சீரியல் நடிகை பிரியங்காவின் திருமணம் திடீரென நின்றுவிட்டது தெரியவந்துள்ளது.
தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா. அதன் பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் சித்தார்த், சந்தானம் நடித்த 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தில் ஹன்சிகாவின் தோழியாக நடித்தார். அதுவே அவரது முதல் தமிழ் படம்.
சில காலம் சினிமா வாய்ப்பு தேடி வந்த பிரியங்கா, ஒருகட்டத்தில் சின்னத்திரை மெகா சீரியல்களில் நடிக்க முடிவு செய்தார்.
ரோஜா சீரியல்
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா எனும் நாடகத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியல் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.
காதல் திருமணம்
இந்நிலையில் பிரியங்காவின் திருமணம் நின்றுவிட்ட விஷயம் தெரியவந்துள்ளது. தெலுங்கு சீரியல் நடிகர் ராகுலும், பிரயங்காவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இருவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
தாமதமான திருமணம்
ஆனால் தொழில் நிமித்தமாக பிரியங்கா பிஸியாக இருந்ததால், இவர்களுடைய திருமணம் தாமதமானது. இதனால் கோபமடைந்த ராகுல். மலேசியாவில் வேலை தேடி சென்றுவிட்டார். இதையடுத்து இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது.
பிரியங்கா அறிவிப்பு
இந்நிலையில் பிரியங்கா தற்போது தனது திருமணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். ராகுல் உடனான தனது திருமணம் நின்றுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் பிரியங்கா ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.