Don't Miss!
- Sports மச்சக்காரன்யா நீ.. ஒரு போட்டிக்கு 3 கோடி சம்பளம்! ஒரு விக்கெட்டுக்கு 2.4 கோடி.. தீபக் சாஹரின் யோகம்
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நடிப்பில் பிசி.. கோபத்தில் மலேசியா பறந்த காதலர்.. பாதியில் நின்றது பிரபல நடிகையின் திருமணம்!
ரோஜா சீரியல் நடிகை பிரியங்காவின் திருமணம் நின்றுவிட்ட விஷயம் தெரியவந்துள்ளது.
Recommended Video
சென்னை: பிரபல மெகா சீரியல் நடிகை பிரியங்காவின் திருமணம் திடீரென நின்றுவிட்டது தெரியவந்துள்ளது.
தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா. அதன் பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் சித்தார்த், சந்தானம் நடித்த 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தில் ஹன்சிகாவின் தோழியாக நடித்தார். அதுவே அவரது முதல் தமிழ் படம்.
சில காலம் சினிமா வாய்ப்பு தேடி வந்த பிரியங்கா, ஒருகட்டத்தில் சின்னத்திரை மெகா சீரியல்களில் நடிக்க முடிவு செய்தார்.
ரோஜா சீரியல்
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா எனும் நாடகத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியல் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.
காதல் திருமணம்
இந்நிலையில் பிரியங்காவின் திருமணம் நின்றுவிட்ட விஷயம் தெரியவந்துள்ளது. தெலுங்கு சீரியல் நடிகர் ராகுலும், பிரயங்காவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இருவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
தாமதமான திருமணம்
ஆனால் தொழில் நிமித்தமாக பிரியங்கா பிஸியாக இருந்ததால், இவர்களுடைய திருமணம் தாமதமானது. இதனால் கோபமடைந்த ராகுல். மலேசியாவில் வேலை தேடி சென்றுவிட்டார். இதையடுத்து இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது.
பிரியங்கா அறிவிப்பு
இந்நிலையில் பிரியங்கா தற்போது தனது திருமணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். ராகுல் உடனான தனது திருமணம் நின்றுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் பிரியங்கா ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.