twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நீங்கள் இருந்திருந்தால்..மகிழ்ச்சியாக இருந்திருப்பேன்..கணவரின் போட்டோ முன் கலங்கிய மேக்னா ராஜ்!

    |

    சென்னை : நடிகை மேக்னா ராஜ் கணவரின் புகைப்படம் முன் நின்று, நீங்கள் இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பேன் என கற்பனை செய்து பார்க்கிறேன் என உருக்கத்துடன் பகிர்ந்துள்ளார்.

    காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உட்பட தமிழ் படங்களில் நடித்திருப்பவர் கன்னட நடிகை மேக்னா ராஜ்.

    இவர் கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2020-ம் ஆண்டு சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் மரணமடைந்தார். சர்ஜாவின் திடீர் மறைவு கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    காசு வந்துட்டா புள்ளைங்களுக்கு மனப்பான்மை மாறிடும்... விஜய் குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர்காசு வந்துட்டா புள்ளைங்களுக்கு மனப்பான்மை மாறிடும்... விஜய் குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர்

    மேக்னா ராஜ்

    மேக்னா ராஜ்

    சர்ஜா உயிரிழக்கும் போது மேக்னா ராஜ் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கணவரை இழந்த சோகத்தில் இருந்த மேக்னாவின் சோகத்தை போக்கும் வகையில் அழகான ஆண்குழந்தை பிறந்தது. இதன் மூலம் இவர் வாழ்க்கையில் சந்தோசம் எட்டி பார்த்தது. மேலும், ஜூனியர் சிரஞ்சீவிக்கு ராயன் ராஜ் சர்ஜா என பெயர் வைத்துள்ளார்.

    பிலிம்பேர் விருது

    பிலிம்பேர் விருது

    திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த மேக்னா ராஜ் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இதையடுத்து, பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் கலந்து சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார் மேக்னா ராஜ். இவருக்கு பலரும் இணையத்தில் வாழ்த்து தெரிவித்தனர்.

    நீங்கள் இருந்திருந்தால்

    நீங்கள் இருந்திருந்தால்

    இந்நிலையில், மேக்னா ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,கையில் விருதுடன் கணவர் சிரஞ்சீவி சர்ஜாவின் புகைப்படத்தின் முன் நின்று, என் மகிழ்ச்சியை குலைக்க முடியாது. நீங்கள் இருந்திருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பேன் என்று கற்பனை செய்து பார்க்கிறேன். சிரு, உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன். இன்னும் என்னைச் சுற்றி அதிசயங்கள் நடக்கின்றன என உணர்ச்சிப்பூர்வமாக மேக்னா ராஜ் பதிவிட்டுள்ளார்

    இரண்டாவது திருமணமா?

    இரண்டாவது திருமணமா?

    அண்மையில், நடிகை மேக்னா இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும், பிக் பாஸ் 4 கன்னட டைட்டில் வின்னர் பிரதாமை தனது வருங்கால கணவராக தேர்ந்தெடுத்ததாகவும் வதந்திகள் பரவியது.ஆனால், அந்த தகவல் உண்மை இல்லை என்றும், இதுவரை குழந்தையை பற்றி மட்டும் தான் நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். எதிர்காலத்தில் என் மனநிலை எப்படி இருக்குமோ என்று தெரியவில்லை என கூறியிருந்தார்.

    பிலிம்பேர் விருது

    பிலிம்பேர் விருது

    திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த மேக்னா ராஜ் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இதையடுத்து, பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை கௌரவிக்கும் வகையில் விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட மேக்னா விருதை பெற்றுக்கொண்டு எல்லைஇல்லா மகிழ்ச்சியில் இருப்பதாக கூறினார்.

    English summary
    Kannada actor Chiranjeevi Sarja, his wife Meghana Raj Sarja remembered him with an emotional post.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X