கணவருடன்.... மகனுடன்... புகைப்படம் வெளியிட்டு மகிழ்ந்த மேக்னா... கூட இருக்கறது யாரு?
டெல்லி : இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக்னா ராஜ் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அடுத்தடுத்த புகைப்படங்களில் தனது கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.
அவருடைய கணவர் கடந்த ஆண்டில் உயிரிழந்த நிலையில், தறபோது அவருடைய இடத்தை அவர்களின் மகன் பூர்த்தி செய்துள்ளார்.

சிறப்பான பகிர்வுகள்
நடிகை மேக்னா ராஜ் சமூக வலைதளங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவரது பகிர்வுகள் எப்போதும் ரசிகர்களின் அதிகபடியான லைக்குகளை பெற்றுவிடும். கடந்த ஆண்டில் இவரது கணவர் சிரஞ்சீவி கடந்த ஆண்டு ஜூன் 7ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து மேக்னா ராஜிற்கு ஆண் குழந்தை பிறந்தது.

கணவர்மீது விருப்பம்
தான் தன்னுடைய கணவரை மிகவும் மிஸ் செய்வதாக எப்போதும் மேக்னா பதிவிட்டு வருகிறார். சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய கணவருடன் பாரீசின் ஈபிள் டவரின் முன்பு தான் எடுத்த புகைப்படத்தை பதிவிட்ட மேக்னா ராஜ், தான் அவரை மிகவும் விரும்புவதாகவும் திரும்ப வந்துவிடும் படியும் பதிவிட்டிருந்தார்.
Recommended Video

தொடர் பதிவுகள்
எப்போதும் பழைய புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் மேக்னா. இந்நிலையில் தற்போது தன்னுடைய தோழி வித்யஸ்ரீ ராவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை இரண்டு கட்டங்களாக பதிவிட்டுள்ளார்.

கணவர், குழந்தை இணைப்பு
முதல் படத்தில் தோழியுடன் கணவர் மற்றும் மேக்னா இருக்கும்படியாகவும் இரண்டாவது புகைப்படத்தில் தோழியுடன் மகன் மற்றும் மேக்னா இருக்கும்படியாகவும் இரண்டு புகைப்படங்களை அவர் பதிவிட்டுள்ளார். எப்போதும் அன்புடன் என்னும்படியான எமோஜியையும் அவர் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











